Tag: panchami

  • Worship of Varaki Amman: A spiritual method that gives success in 45 days

    வாராகி அம்மன் வழிபாடு இன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. வீடுகளிலும், ஆலயங்களிலும் பலர் வாராகி அம்மனை வணங்குகின்றனர். குறிப்பாக, வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி திதிகளிலும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சிலர் தினமும் வீட்டில் வாராகி அம்மனை வணங்குகின்றனர். இந்த ஆன்மிகப் பதிவில், 45 நாட்களில் காரிய சித்தி தரும் வாராகி அம்மன் வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.எந்த தெய்வத்தை வணங்கினாலும், ஒரு வேண்டுதலை முன்வைத்தே வழிபாடு செய்கிறோம்.

    வாராகி அம்மனை வணங்குவதன் மூலம், நினைத்த காரியம் விரைவில் நிறைவேற வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, பஞ்சமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்க வேண்டும். வீட்டில் வாராகி அம்மனின் படம் இருந்தால், அதை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கவும். ஆறு தீபங்கள் ஏற்றி, நெய்வேத்தியமாக மாதுளம்பழ முத்துக்களை தேனில் கலந்து வைக்கவும்.வலது கையின் மோதிர விரலில் வாசனையுள்ள தாழம்பூ குங்குமத்தை எடுத்து, வாராகி அம்மனின் காரிய சித்தி மந்திரத்தை ஒருமுறை அல்லது ஆறு முறை உச்சரிக்கவும்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் சுக்ல வாராகி மம ரக்ச ரக்ச வார்த்தாலி வார்த்தாலி வாராகி வாராகி சகல காரிய சித்திம் அனுக்கிரகம் குரு குரு”.

    இதை கூறி, குங்குமத்தை இலை அல்லது கிண்ணத்தில் வைக்கவும். பின்னர், நினைத்த காரியத்தை மனதில் வைத்து வேண்டுதல் செய்யவும். காரியம் தொடர்பாக வெளியே செல்லும்போது, இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவும். இவ்வாறு 45 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது, காரியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே வரும். இந்த காலத்தில் உணவில் அசைவத்தை தவிர்த்து, சுத்தமாக இருக்கவும். தீட்டு காரியங்களில் ஈடுபடாமல், விரதம் போல இவ்வழிபாட்டை மேற்கொள்ளவும். இதனால், வாராகி அம்மனின் அருளால் காரிய சித்தி கிடைக்கும்.

  • Valamana vazhvu tharum vasanth panchami

    சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், அம்பாளைத் தொழுது வழிபாட்டால், வாழ்வில் வசந்தம் நிச்சயம். சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம். 

    பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்.

    வசந்த பஞ்சமி நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை வழிபடலாம்.

    அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.