Tag: Navagraha

  • Navagraha dosham vilaga mandiram

    வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல், எல்லோரும் சுகமாகத்தான் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரக நிலைகள் நல்லபடி அமைந்திருந்தாலும்கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்திக்கவே நேரிடுகிறது. கிரக நிலைகள் நல்லபடி இருப்பவர்களுக்கே இப்படி என்றால், கிரக தோஷம் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றிருப்பவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல நேரங்களில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கவே நேரிடும்.

    ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காகவே, நம்முடைய பாரத புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள் அற்புதமான பல வழிகளைக் காட்டி இருக்கிறார்கள்.

    அந்த வழிகளுள் ஒன்றுதான் தெய்வ மந்திரங்களைப் பாராயணம் செய்வதும். தெய்வ மந்திரங்கள் என்றால் சமஸ்கிருதத்தில் இருக்கும்; அதன் உச்சரிப்பு பிசகாமல் எப்படி  பாராயணம் செய்வது என்ற கவலையே யாருக்கும் வேண்டாம். தமிழிலும் பல அற்புதமான துதிப் பாடல்களும், பதிகங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி, திவ்விய பிரபந்தம் போன்ற வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லலாம்.
     

  • Agal Vilakku Navagraha Thathuvam

    கார்த்திகை தீபத்திருநாளில் வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி அலங்கரிப்போம். அகல் விளக்கு ஏற்றி வழிபடும் நமக்கு அதில் உள்ள நவகிரஹா தத்துவம் குறித்து தெரியுமா? 
    இதோ தெரிந்து கொள்ளுங்கள்…. 

    அகல் விளக்கு = சூரியன்

    நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

    திரி = புதன்

    அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

    இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

    ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

    ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

    வெளிச்சம் பரவுகிறது – இதுஞானம் = கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

    ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது…

    இதுவே அகல் விளக்கு ஏற்றுவத்தின் நவகிரஹ தத்துவம்.