Tag: Natarajar

  • December 19 chidamparam natarajar car fest

    டிசம்பர் 19 – சிதம்பரம் நடராஜர் தேர்
    பிலவ வருடம் – மார்கழி 4
    சிதம்பரம் நடராஜர் தேர்
    19-டிச-2021 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    10.22
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    மா    5.26
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Panchanatha Natarajar

    திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோயில். இந்த கோயிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.

    பஞ்சநத நடராஜர் சிலையின் மகிமை…
    ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

    பாறைகளின் சிறப்புகள்
    ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.
    நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
    சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என அழைக்கப்படுகிறது.

    அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை….
    இந்த கோயிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

    பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு…
    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).

    ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்….

    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    நோய் நீக்கும் நடராஜர்….

    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்……….

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    மாற்று திசையில் நந்தி தேவர்….
    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
     

  • Natarajar Peruman Thandavamadiya Thiruthalangal

    மகாலட்சுமியின் தவத்திற்கு இணங்கி நடராஜப் பெருமான் ஆடிய லட்சுமி தாண்டவ திருக்கோலத்தை திருப்பத்தூர் மாவட்டம் திருத்தளியில் தரிசிக்கலாம். ஸ்ரீ பத்துக் கரங்களுடன், இடது காலை ஊன்றி வலது உள்ளங்கால் தெரியும்படி அகத்தியருக்காக ஆனந்த தாண்டவமாடிடும் நடராஜரை நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள கீழ்வேளூரில் காணலாம்.

    திருவாரூரில், திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கேற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. இவர் வீதிவிடங்கர் என்றும் இருந்தாடழகர் என்றும் போற்றப்படுகிறார்.

    பழநிக்கு அருகே கொழுமம் கோயிலில் ‘நித்தம் நின்றாடுவார்’ எனும் திருப்பெயரில் அக்னி பகவானுக்கு அருளிய நடராஜமூர்த்தியை தரிசிக்கலாம்.

    திருவாரூருக்கு அருகே உள்ள திருக்காறாயிலில் நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனமாடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்றும் ஆடும் நடனவகை இது.

    நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர் ஆடுவது, பாராவாரதரங்க நடனம். பாராவாரம் எனில் கடல்; தரங்கம் எனில் அலைகள். கடலலை போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடும் நடனம் இது.

    திருநள்ளாறு கோயிலில் நாகவிடங்கர் ஆடும் நடனம்& உன்மத்த நடனம். பெருமான் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இந்தப் பெயர்.

    திருவாரூர், கச்சனத்திற்கு அருகே உள்ள திருக்குவளையில் அவனி விடங்கர், பிருங்கி நடனம் ஆடுகிறார். பிருங்கி எனில் வண்டு. வண்டு பூவைச் சுற்றிப் பறந்து, உயர்ந்து, தாழ்ந்து, பின் பூவில் அமர்வது போன்ற நடனம் இது.

    நாகை, வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம். அன்னப்பறவை அடி மேல் அடிவைத்து எழிலாக நடப்பது போலிருக்கும்.

    திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம், கமல நடனம் ஆகும். ஈசன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகே திருக்கடையூரில் தரிசிக்கலாம். கஜ சம்ஹாரத்துக்குப் பின் பிட்சாடன வடிவில் ஈசன் கஜசம்ஹார நடனம் ஆடினார். இத்திரு வடிவம், மன்னர்குடி, வழுவூரில்‘கரியுரி போர்த்த கடவுளா’க வணங்கப்படுகிறது.

    காளியின் கர்வத்தை அடக்க ஈசன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை சென்னை, திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டில் தரிசிக் கலாம்.

    வாசுகி பாம்பிற்காக ஈசன் ஆடியது, வாசுகி அனுக்ரஹ நடனம். இவரை கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயத்தில் ஓவியமாகக் காணலாம்.

    சிதம்பரத்தை அடுத்துள்ள ஓமாம்புலியூரில் வியாக்ரபாத முனிவருக்காக நடனமாடினார் நடராஜர். இங்குதட்சிணாமூர்த்தியும் நடராஜரும் இடம் மாறி வீற்றிருப்பது சிறப்பு.

    சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியுள்ள சிற்சபை, அதற்கு முன் உள்ள மகாமண்டபம் கனகசபை, இரண்டாம் பிராகாரத்தில் தேர் வடிவ நிருத்தசபை, உற்சவமூர்த்தங்கள் உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபம் உள்ள ராஜசபை என்று பஞ்ச சபைகள் உள்ளன.

    ஈசன் பார்வதிக்கு ஆடிக் காட்டிய கௌரி தாண்டவத்தை திருவடிவை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

    காளி தேவிக்காக ஈசன் ஆடியது காப்புத் திருநடனம் (ரட்சா தாண்டவம்). சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள கூவம் கோயிலில் பத்தாம் நாள் திருவிழாவின் போது இந்த நடனத்தை தரிசிக்கலாம்.

    சிதம்பரம் அருகிலுள்ள கூடலையாற்றூரில், ஈசன் பிரம்மனுக்கு தாண்டவ தரிசனத்தை தந்தருளியதால் நர்த்தனவல்லபேசர் என வணங்கப்படுகிறார்.

    ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சித்ரா பௌர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக ஈசன் ஆடிய நடனம், சித்திர நடனம் எனப்படுகிறது.