Tag: Marriage

  • Benefits of lighting a ghee lamp!

    இறைவனை வழிபடுவதில் தீப வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தீப ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் லட்சுமி தேவியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம் உள்ளது. ஆகவே, தீபத்தில் முப்பெரும் தேவியரும் கடாட்சம் செய்வதாக நம்பப்படுகிறது.

    விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் பலன்கள்:

    • 5 நெய் விளக்குகள்: சிறந்த கல்வி மற்றும் ஞானம் பெறலாம்.

    • 9 நெய் விளக்குகள்: நவகிரக தோஷங்கள் விலகும்.

    • 12 நெய் விளக்குகள்: தடைகள் நீங்கி, எடுத்த காரியம் வெற்றியடையும்.

    • 18 நெய் விளக்குகள்: கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் அகலும்.

    • 27 நெய் விளக்குகள்: திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • 36 நெய் விளக்குகள்: சகல தோஷங்களும் நீங்கும்.

    • 48 நெய் விளக்குகள்: தொழில் விருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    • 108 நெய் விளக்குகள்: அம்மனின் அருள் முழுமையாக பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பிறகு, கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வருவது சிறப்பு.

    நெய் தீப பரிகாரங்கள்:
    வீடுகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜ சிலைக்கு அபிஷேகம் செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், தம்பதியரிடையே ஒற்றுமை நிலைக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் அமாவாசை அன்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றினால் தோஷம் நீங்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்து, தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால், விரைவில் கருத்தரிக்கலாம். தீபம் ஏற்றும்போது வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்து ஏற்றினால் செல்வ செழிப்பு பெருகும்.

    கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்தி பொழுது நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. கருவறையில் உள்ள தூங்கா விளக்கில் நெய் ஊற்றி வழிபட்டால், கடுமையான பிரச்சினைகளும் விலகும். சமூக வலைதளங்களில், இந்த பரிகாரங்களை பலரும் பகிர்ந்து, இறைவனின் அருளை பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

  • Guru palan for marriage

    குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடுதல், புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பார்கள். அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி உடனே திருமணத்தை நடத்தி தருவார். ஜாதகத்தின் விதியையும்  மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது. எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என நன்கு  அறிந்த பின் திருமண முயற்சிகளில் ஈருபடுவார்கள். 

    குருவின் பார்வை களஸ்திர ஸ்தானத்தில் வரும்போது திருமண வயதில் உள்ளவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் நிச்சயம் திருமணம் கைகூடிவரும். அதுபோல குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தில் இருந்தால். அந்த ஜாதகருக்கு அந்த குருபெயர்ச்சி காலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும்.

    ஒரு ஜாதகத்தில் குருவின் அருள் முழுமையாக இல்லாவிட்டால் திருமணம் கால தாமதமாகலாம். அல்லது திருமண வாழ்வில் நிம்மதியின்மையோ, குழந்தை பேறோ கிடைக்காமல் இருக்கலாம். இந்த குறையை சில பரிகாரங்களின் மூலமாகவும் குரு ஆராதனைகள் மூலமும் முழுவதும் நிவர்த்தி செய்யலாம்.
     

  • Thirumanam Kuritha Kavalaya

    உங்கள் மகன், மகள் திருமணம் தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வந்து  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

    பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வை ஏற்படுத்தி தருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்.

    மகன், மகளுக்கு திருமணம் நடக்காமல் அவதிப்பட்டு வந்த ஏராளமான பெற்றோர்  அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வருகை தந்து சித்தர்கள் அருளால் தடைகள் நீங்கி தங்கள் குழந்தைகளின் திருமணம் நடந்து வாழ்வு செழித்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு வந்து திருமணத் தடைகள் நீங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் நடந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இதேபோல் தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. பரிகாரம் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் செய்ய சொல்கிறார். இங்கு வந்து பயன் பெற்றவர்கள் ஏராளம்… ஏராளம் பேர். மனதை வருத்திய கடன் தீர்ந்து நிம்மதியுடன் வாழ்கின்றனர். 

    திருமணத்தடைகள் நீங்க இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்தவர்கள் மனம் போல் மாங்கல்யம் உடனே அமைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காக 10008க்கும் அதிகமான யாகம் செய்துள்ளார். இந்த யாகம், சித்தர்கள் மற்றும் பல தெய்வங்களை வேண்டி மக்கள் நன்மைக்காக செய்துள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

    நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சுவாமிகளை சந்திக்க முன் அனுமதி பெற்று வரவும். மேலும் ஆதியோகவாசி பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.