Tag: Mariamman Koil

  • Mariamman Koil Festival

    திருச்செங்கோட்டில் 18 மாரியம்மன் கோயில்களிலும் இன்று கம்பம் விடும் விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

     பக்தர்கள் பல்வேறு வேடங்களை இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர் பாடை வேடமிட்டு பிணம் போல் படுத்து வந்தவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர் இதனையடுத்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் பூஜைகள் செய்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு மிளகு ஆகியவற்றை கம்பங்கள் மேலும் கும்பங்கள் மீதும் தூவி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.