Tag: Margazhi

  • Chidambaram Nataraja Temple: Arudhra Darshan Utsavam Commences

    டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்  கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனையத்து நாளை ஞாயிற்றுக்கிழமை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6 ஆம் தேதி அன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7 ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது.

     விழாவின் முக்கிய நிகழ்வான  தேர்த்திருவிழா 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15 ஆம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

     

  • Margazhi month viradhangal

    பௌர்ணமி விரதம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

    ஆருத்ரா தரிசனம்
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார்.

    வைகுண்ட ஏகாதசி
    வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    பரசுராம ஜயந்தி
    தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    மாதாந்திர சிவராத்திரி
    சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அனுமன் ஜயந்தி
    இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி அமாவாசை
    முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

    கூடார வல்லி
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 – வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

    போகிப் பண்டிகை
    மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.

  • December 17 2023 Margazhi poojai

    டிசம்பர் 17 – மார்கழி பூஜை ஆரம்பம்
    சோபகிருது வருடம் – மார்கழி 1
    17-டிச-2023 ஞாயிறு
    மார்கழி பூஜை ஆரம்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 8.55
    நட்சத்திரம்: திருவோணம்கா 7.57
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Margazhi month sirappugal

    மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.

    தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

    சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

    மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
     

  • Margazhi Month Sirappugal

     பௌர்ணமி விரதம்
    மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாத பௌர்ணமி விரதம். மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

    ஆருத்ரா தரிசனம்
    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். 

    வைகுண்ட ஏகாதசி
    வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    பரசுராம ஜயந்தி
    தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    மாதாந்திர சிவராத்திரி
    சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். இன்று மார்கழி மாத சிவராத்திரி. அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அனுமன் ஜயந்தி
    இன்று அனுமன் ஜயந்தி தினம். அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    மார்கழி அமாவாசை
    முன்னோர்கள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும். 

    கூடார வல்லி
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள், தனது 27 – வது பாசுரமான `கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் பாடிய தினம். ராமானுஜர், ஆண்டாள் வேண்டிக் கொண்டபடி அக்கார அடிசிலும் வெண்ணெய்யையும் அழகருக்குப் படைத்துக் கொண்டாடிய நாள்.  

    போகிப் பண்டிகை
    மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத் திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள்.

  • margazhi donts

    மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு தூங்கக்கூடாது. 

    நாலரை மணிக்கு எல்லாம் கண்டிப்பா குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். 

    அதிகாலை நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய ஆதீதமான ஆக்சிஜன் சக்தி உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும். 

    மார்கழி மாதத்தில் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர் தன்மைப் பெற்று வளராமல் போய்விடும் என்பதாலேயே அதிகமான திருமணங்கள் மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். 

    மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது

    கோலம் என்பது அழகுக்காக மட்டும் இடக்கூடிய விஷயம் அல்ல. அது தர்மத்திற்காக இடக்கூடியது. 

     

  • Thandava Deeparadhanai

    மார்கழி மாசம் எனப்படும் தனுர் மாதத்தில் எல்லா நாட்களும் நடராஜருக்கு இந்த தாண்டவ தீபாராதனை காட்டப்படும். திருக்குற்றாலம் செங்கோட்டை மற்றும் பல சிவாலயங்களில் இந்த தாண்டவ தீபாராதனை காட்டப்படுகிறது..