Tag: mangalyam

  • Spiritual Vastu Rules for Women: Auspicious and Divine!

    பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக வாஸ்து விதிகள், சுப மங்களங்களையும் தெய்வீகப் பண்புகளையும் பெற உதவும். பெண்கள் எப்போதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும்: மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு. இது உடல் ஆரோக்கியத்தையும், ஆன்மிக சக்தியையும் தரும். தாலியை நூல் சரட்டில் கோர்த்து அணிவது சிறப்பு, ஏனெனில் நூலில் பஞ்ச பூத சக்திகள் உள்ளன. தேவையான சங்கிலியை அணியலாம், ஆனால் தாலியை தினமும் கழற்றி அணிவது தவறு; அது எப்போதும் கழுத்தில் இருக்க வேண்டும்.

    காலையில் அடுப்பு பற்றவைக்கும் முன், அக்கினியை வணங்கி, “சமைத்த உணவை உண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்” என பிரார்த்திக்கவும். மாலையில் அரசமரத்தை வலம் வருவது தவிர்க்கப்பட வேண்டும். கோயிலுக்கு எடுத்துச் செல்லும் எண்ணெயை, கோயில் விளக்கில் மட்டுமே ஊற்ற வேண்டும்; பிறர் ஏற்றிய விளக்கில் ஊற்றக் கூடாது. முந்தானையைத் தொங்கவிடாமல், இழுத்து சொருகி நடக்கவும், இல்லையேல் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    குத்து விளக்கு ஏற்றும்போது, ஒரு திரி மட்டும் பயன்படுத்தக் கூடாது; இரு திரிகளுடன் ஒரு முகமாக ஏற்றவும். கோலம் போடும்போது தெற்கு நோக்கி நிற்கக் கூடாது; கோடு தெற்கில் முடியாமல் இருக்க வேண்டும். கோயிலில் வணங்கும்போது, பின்னங்கால்களைச் சேர்த்து, நெற்றி தரையில் படுமாறு முழு உடலுடன் விழுந்து கும்பிட வேண்டும். பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது, முந்தானையை இடது, வலது கைகளுக்கு நடுவில் வைத்து பெறவும்.

    சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது, தெற்கு முகமாக உட்கார்ந்து, மஞ்சள் தேய்த்து முகத்தில் பூசி குளிக்க வேண்டும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய், மஞ்சள் பூசி, குளித்து அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். இவ்விதிகளைப் பின்பற்றுவது ஆன்மிகப் பலன்களையும், குடும்ப நலனையும் உறுதி செய்யும்.

  • Manam pol mangalyam amaya

    உங்கள் மகன், மகள் திருமணம் தொடர்ந்து தடைகளால் தாமதம் ஆகிறதா? கவலை வேண்டாம். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திற்கு வாங்க  தடைகள் நீங்கி மகிழ்ச்சி அடையுங்கள்.

    ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம், C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ), கோயமுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் அருளால் பல பிரச்னைகள், மன வேதனைகளுடன் வருபவர்கள் நிம்மதி போன்றவை கிடைக்கிறது.

    தமிழகத்தின் சித்தர்கள் மலை என்று பெருமை வாய்ந்த சுருளிமலையில் யாகங்கள், தியானங்கள் செய்து சித்தர்கள் அருள் பெற்றவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சக்தி வாய்ந்த சுருளி மலையில் உலக மக்களின் நன்மைக்காகவும், உலக நலன் வேண்டியும் 10008க்கும் அதிகமான யாகங்கள் நடத்தி உள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு புகழ் பெற்ற கோயில்களுக்கு யாத்திரை சென்று அங்கு வேள்விகள் நடத்தியவர்தான் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

    ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் மக்களின் பிரச்னைகள் அகலவும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் நல்வழிகள் ஏற்படுத்தி தந்து வருகிறார். தொழில் முன்னேற்றம் இல்லாமல் வேதனை அடைபவர்களுக்கு தீர்வு கிடைக்க செய்கிறார். இவரிடம் வந்து சென்றவர்கள் தங்களின் துன்பம் கதிரவனை கண்ட பனித்துளி போல விலகி வாழ்வில் சுபிட்சம் அடைந்துள்ளனர். முக்கியமான தடைகளால் தவித்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் அந்த தடைகள் நீங்கி மனம் போல் மாங்கல்யம் அமைந்து சிறப்பான வாழ்வு அமைந்து நிம்மதியாக உள்ளனர்.

    தொழில் முன்னேற்றம் இல்லாமல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடை. வேலை வாய்ப்பில் ஏற்பட்டு வரும் தடை ஆகியவையும் முழுமையாக சரியாகிறது. நவக்கிரக தோஷம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, குழந்தைகளின் கல்வி, முன்னோர்கள் சாபம், திருமணத்தடை என்று அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகார நிவர்த்தி பூஜைகளை சித்தர்கள் அருளாசியுடன் சிறப்பாக செய்து தேடி வந்தவர்களின் குறைகளை தீர்த்து வைத்து வருகிறார் அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.  
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.