Tag: malai

  • Sabari malai dharshan niraivu

    சபரிமலையில் இன்றுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவு நாளை பந்தள மகாராஜா வுக்கான தரிசனத்துடன் மகரவிளக்கு தரிசனம் பூஜைகள் நிறைவடைந்து நடை சாத்தப்படும்.

    சபரிமலை கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி மண்டல மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக பூஜைக்காக திறக்கப்பட்டது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் முதலில் ஆயிரம் பக்தர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சன்னிதானத்தில் ஐயப்ப தரிசனம் செய்தனர் கடந்த ஜனவரி 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது தொடர்ந்து கோவிலில் 5 நாட்கள் முக்கிய சடங்குகள் நடைபெற்றது.

    சபரிமலையை பொருத்தவரை மகரஜோதி தரிசனத்திற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு சாப்பிடுவதற்காக திரு ஆபரண பெட்டி கொண்டுவரப்படும் ஒரு பெட்டியில் திரு ஆபரணங்களும் மற்ற இரண்டு பெட்டிகளில் கோவிலில் ஐந்து நாட்கள் நடைபெறும் சடங்குகளுக்கான கொடி மற்றும் பூஜைக்கான சிறப்பு பொருட்களும் இருக்கும் திரு ஆபரண பெட்டி சன்னிதானத்தில் மற்ற பூஜைகளுக்கான இரண்டு பெட்டிகள் மணி மண்டபத்திலும் வைக்க எடுத்துச்செல்லப்படும் ஜோதி தரிசனம் முடிந்த பிறகு முதல் களம் எழுத்து என்று சொல்லப்படும்.

     சடங்கு அனைத்தும் சபரிமலையில் பதினெட்டாம் படிக்கட்டின்கீழ் நடைபெறும்  தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று ஐயப்பன் ஆயுதங்களை விட்டுச்சென்ற சரங்கொத்தியில் குருதி பூஜை என்று அழைக்கப்படும் வன தேவதைகளுக்கும்  மலை தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஐந்தாம் நாளான சடங்குகள் மட்டும் சரங்கொத்தியில் நடைபெறும் இதில்  நிகழ்வு முடிந்தவுடன் அனைத்து பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் சன்னிதானத்தை விட்டு புறபட்டு விடுவார்கள் அதன் பிறகு இன்று மாலையுடன் மகரவிளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனம் நிறைவு  பெரும். 

  • Kurundai malai murugan

    கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பாதையில் 28 கி.மீ. தொலைவிலுள்ள காரமடையிலிந்து அத்திக்கடவு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. குருந்தை மலை முருகன் கோவில். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக காட்சியளிக்கிறார்.

    650 வருடங்கள் பழமையான இக்கோவிலில் உள்ள முருகன் பழனி கடவுள் போல மேற்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இம்மலைக்கு தெற்கே சஞ்சீவ மலையும், வடக்கே பகாசுரன் மலையும் உள்ளன. கீழே ஆரவல்லி, சூரவல்லி வசித்த கோட்டைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கம்பீர தோற்றத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து இடும்பன் சன்னதியும், நாக தீர்த்தம், மயில் தீர்த்தம் உள்ளன. ஸ்தல விருட்சமாக குருந்த மரம் இருப்பதால் இம் மலையில் வாழும் முருகனுக்கு குருந்த மலை முருகன் என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் அகஸ்தியர், அனந்தன் என்ற சர்ப்பம் சூரியன் வணங்கி, முருகனின் அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    இக்கோவிலின் எதிரே கஜபுஷ்கரணி உள்ளது மற்றும் அனுமன் சுனை, அனுமன் கோயில் உள்ளது.அனுமன் மலையை தாவும் பொழுது, இங்கு ஒரு காலும், மற்றொரு மலையான சஞ்சீவி மலையிலும் ஒரு கால் வைத்ததாக ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பிராப்தி கிடைக்கும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.