Tag: Magimaigal

  • Soorya bagavan magimaigal

    ஸ்ரீமன் நாராயணனே ராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து ராவணனை அழிக்க முயன்ற சமயத்தில் அரக்கனின் பலம் அதிகரித்ததால் மனம் தளர்ந்த வேளையில் அகத்திய முனிவர் அண்ணல் ராமனிடம்  குலதெய்வமான ஆதவனை முறைப்படி வணங்கி வெற்றி பெறுவாயாக என்று கூற, அவ்வாறே வழிபட்டு ஸ்ரீராமபிரான் போரில் வெற்றி கண்டார்.

    ஆதிசங்கரர் பகவத் பாதர் ‘சூரிய பகவானை’ வழிபாட்டு கடவுளாகக் கொண்ட சௌரம் என்ற மதத்தை ஸ்தாபித்தார்.

    நக்கீரர்  திருமுருகாற்றுப்படையில் ‘உலகம் உவப்ப வலநேர்பூ திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு’. என்று சூரியபகவானை போற்றி  வணங்கி துவங்குகின்றார்.

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்  ‘ஞாயிறு போற்றுதும்’, ஞாயிறு போற்றுதும் என்று  சூரிய பகவானைபோற்றி வணங்கியே  துவங்குகின்றார்.

    அபிராமி பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்றே ஆரம்பித்து  அபிராமி அந்தாதியை  பாடத் துவங்குகின்றார். மணிமேகலை என்னும் காப்பியத்தில் புத்தரை ‘புத்த ஞாயிறு’என்றே குறிப்பிட்டுள்ளார்.

    ‘யஜுர் வேதம் ‘சூரியபகவானின் பெருமைகளை போற்றியும், ‘சாம வேதம்’ அனைத்து வெற்றிகளை அளிப்பதாக போற்றியும் ‘அதர்வன வேதம்’பிணிகளை அகற்றியும் பசுவின் மடியில் உள்ள கிருமிகளை சூரியக்கதிர்கள் அழிப்பதாகவும் கூறுகிறது.
     

  • Sandal magimaigal

    சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் அணிவது வழக்கம்.

    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
     

  • Arukampullin magimaigal

    எமனின் மைந்தன் அனலாசுரன். ஒருநாள் இந்திரன் முதலான தேவாதிதேவர்களை அப்படியே விழுங்கிவிடத் துரத்தினான். அப்போது தேவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று அடைக்கலமானது, விநாயகரிடம்.

    இதையடுத்து, அனலாசுரனுடன் போரிட்டு, அவனை அழித்தொழித்தார் விநாயகக் கடவுள். அதாவது, அந்த அரக்கனை அப்படியே விழுங்கினார். அவன்… அனலாசுரனல்லவா. அதனால் கணபதியின் வயிற்றுக்குள் அனலாகத் தகித்தது.

    இதன் பின்னர், அந்த வெப்பத்தைப் போக்க, ஒருபக்கம் தன் அமுத கிரணங்களால் அமுதமூற்றி குளிர்விக்க முயன்றான். சக்தி, புத்தி இருவரும் தங்களின் குளிர்மேனியால் ஒத்தடம் கொடுத்து முயன்றார்கள்.

    மகாவிஷ்ணு, தாமரை மலர்கள் கொண்டு குளிர்விக்க முயன்றார். வருண பகவான் மழையெனப் பொழிந்து அபிஷேகித்தார். இப்படியாக பலரும் பலவிதமான முறையில் குளிர்வித்தார்கள்.

    நிறைவாக, முனிவர் பெருமக்களும் சித்தபுருஷர்களும் அருகம்புல்லை, கட்டுக்கட்டாக எடுத்துவந்து அவர் மீது சாற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அருகம்புல்லை எடுத்து அர்ச்சித்தார்கள். அனலாசுரனால் உண்டான வெப்பம் தணிந்தது. ஆனைமுகத்தானின் தொந்தி குளிர்ந்தது.

    விநாயகரை, முழுமுதற் கடவுள் என்கிறது புராணம். உலகின் முதலில் தோன்றிய உயிர் அருகம்புல் என்றும் தெரிவிக்கிறது. பலப்பல பிறவிகளைக் கடந்த ஆன்மாக்கள், மழை வழியே வந்து, அருகம்புல்லின் நுனியில் துளிர்நீராக, துளி நீராக வந்து உட்கார்ந்து கொள்கின்றனவாம்.

    அருகம்புல்லை பசுக்கள் சாப்பிடுகின்றன. பிறகு அது எருவாகிறது. உரமாகிறது. பச்சைப்பயிர்களுக்குள் செல்கிறது. உணவாகிறது. உணவாக இருந்து உயிர்நிலைக்குச் செல்கிறது. உயிரணுவாகிறது. பிறகு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் சென்று கருவாகி, சிசுவாகி, குழந்தையாகி, மனிதப் பிறப்பாகிறது. ஆக, இத்தனை பெருமைக்கு உரியதாகத் திகழ்கிறது அருகம்புல்.
     

  • Magimaigal NIraindh Maha Sivarathiri

    சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. 

    அன்னை அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம். அப்பன் சிவபெருமானுக்கு ஒரே ராத்திரி அது சிவராத்திரி. கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. 

    சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகா விஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். 

    பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமையை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
     

  • Valampuri Sangu Magimaigal

    108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் சங்காபிஷேகம் எனப்படும். கார்த்திகை மாதம் சோம வாரத்தன்று சிவபெருமானுக்குச் செய்வது மிகவும் சிறப்பானது. சங்காபிஷேகம் கண் குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். இப்படிப் பெருமைகள் பெற்ற வலம்புரிச் சங்கில் காசுகளை வைத்து முக்கிய தினங்களில் வழிபட்டு வந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

    ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தல் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

    கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

    வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நனம் செய்தால், நமக்கு 

    பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ ! "அங்க லஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்" என்று விளங்குகிறது. 

    சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப்பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

    வாஸ்து தோஷம் உள்ள  வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

    செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலப்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

    அதிகக் கடன் வாங்கியவர்கள் பெளர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16- வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

    சுத்தமான் உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது ஓடிவிடும்.

    ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்தால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.

    பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உதராட்சம் இட்டு அது ஊரிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோசஹ்ங்கள் அனைத்தும் விலகும்.