Tag: Lord Murugan

  • Thaipusam, which increases all auspiciousness!

    தைப்பூசம் என்பது  தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.   நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் திருநடனம் ஆடினார். எனவே  தைப்பூச தினம் மிகவும் உத்தமம் ஆகும் என்பார்கள்.

    முருகப்பெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்படு முன், பார்வதி தேவி தம் சக்தியை வேல் வடிவில் அளித்து அருள் பாலித்தார். இதனை `எம் புதல்வா… வாழி வாழி எனும்படி வீறான வேல் தர’ என்று அருணகிரியார் திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார். இவ்வாறு அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. எனவே, சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால், திருவருட்பிரகாச வள்ளலார் அன்று சித்தி விளாகத்தில் ஜோதியில் கலந்தார் என்பர். இதையொட்டி வடலூரில் ஏழு திரையை விலக்கி ஜோதிக் காட்சி நடைபெறும்.

    சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல – இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் – பங்குனி உத்திரம் – வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

    தைப்பூச விழாவையொட்டி பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் பிரசித்தமான விழாவாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பா கக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் இந்த விழாவைப் பிரபலப்படுத்தி உலகில் உள்ள எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாட வகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இங்ஙனம் குருவருளும் திருவருளும் சிறந்து விளங்கும் தைப்பூசத் திருநாளில் நாமும் முக்கண்ணனையும் அவர் மைந்தன் முருக வேளையும் எல்லாம்வல்ல பராசக்தியையும் வழிபட்டு வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.

    திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவம் இருந்து, தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாளாம். ஆக தைப்பூச நாளில் அம்மையப்பரை வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல மங்கலங்களும் பெருகும். அதேபோல் இந்தப் புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ் வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர் என்பது ஐதிகம்.

  • Sashti Fast for Lord Murugan: Blessings for the Birth of a Child

    மாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்பார்கள். பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று சொல்வார்கள். அந்த வகையில் நாளை தேய்பிறை சஷ்டி. 

    தேய்பிறை சஷ்டி நாளில் அதாவது நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

    அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.

    கிட்டும். சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.

    இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மனம் மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சஷ்டி விரதத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும். 

    சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை  அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.

  • Light a Betel Leaf Lamp to Lord Murugan for Your Dream Home!

    சொந்த வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இல்லை. அதற்கான வைராக்கியத்துடன் இருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இப்படி வெற்றிலையில் தீபம் ஏற்றி வாருங்கள்! நிச்சயம் அதற்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். வீடு கட்ட நினைத்தால் மட்டும் போதாது, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வர வேண்டும்.

    அப்படி செய்து வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு கொள்ளுங்கள். அதில் முருகப் பெருமான் அல்லது சிலை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

    சஷ்டி திதியில் முதன் முதலாக உங்கள் செலவில் ஒரு செங்கல்லை மட்டும் வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இந்த பூஜையின் பொழுது மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு அருகில் அந்த செங்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆறு விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை நுனி மற்றும் காம்பு உடைந்து இருக்கக் கூடாது.

    கந்த சஷ்டி கவசம், முருகன் ஸ்தோத்திரங்கள், சண்முக கவசம் போன்ற முருகனுடைய அருளைப் பெறுவதற்கு உரிய ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும். பின்னர் தீபத்தை ஏற்றி, தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். நிவேதனத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் அல்லது தனக்கு விருப்பமுள்ள எந்த பிரசாதத்தையும் செய்து வைக்கலாம்.

    உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொழுது நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் இந்த செங்கல்லை கொண்டு முதன் முதலில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் இப்படி முருக வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கும் சொந்த வீடு அமையும்.
     

  • Murugan who removes endless suffering…

    தீராத துன்பத்தை போக்கும் முருகன் …

    முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்ட சூழ்நிலையும் படிப்படியாக விலகி ஓடும்.

    முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மிக அதிகம். வழிபாடுகளிலும் வழிபாட்டு முறைகளிலும் முருகப்பெருமானுக்குத்தான் பலவிதமான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    முருகப்பெருமானுக்கு எல்லா சிவாலயங்களிலும் சந்நிதி அமைந்திருக்கும். பெரும்பாலான சிவன் கோயில்களில் முருகக் கடவுளும் சாந்நித்தியம் கொண்டவராகத் திகழ்வார். ஆறுபடை வீடுடையோன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறு படைவீடுகள் என்று சொல்லப்படும் கோயில்களையும் தாண்டி ,ஏராளமான முருகன் கோயில்கள் இருக்கின்றன. அதுவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன.

    அதேபோல், பல அம்மன் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. அம்மையப்பன் என்று சிவபார்வதியைச் சொல்வோம். அம்மை குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் அப்பன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் மைந்தன் கந்தனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

    ஆறுபடை வீடுகள் எனும் பட்டியலுக்குள் வராத, வடபழநி, வயலூர், குமரன் குன்றம், குன்றத்தூர் விராலிமலை முதலான ஏராளமான கோயில்களில் இருந்துகொண்டே தன் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருளிக்கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.

    வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் வேலவனுக்கு ஏராளம். காவடி எடுத்து வழிபடுவார்கள். வேல் எடுத்து வந்து பூஜிப்பார்கள். பால் குடம் ஏந்தி வருவார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள். பாலபிஷேகம் செய்வார்கள்.. முடிகாணிக்கை செலுத்துவார்கள். சேவல் வழங்குவார்கள்.

    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.

    ஓம் செளம் சரவணபவ
    ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

    எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள். நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.

     

  • The Legend of Vadapalani Murugan

    The Vadapalani temple was built in late 19th century. The story goes that once, Annasamy Naicker, a staunch devotee of Lord Muruga had been wandering to temples far and wide in search for a solution to his health issues. A Sadhu appeared in Annasamy Naicker’s dreams and said when Murugan is right in your house why do you go in search of him all over? This moved him deeply. As a part of his prayer to the Lord, he had sacrificed his own tongue.

    One day when he was descending the steps of the Pazhani temple after his Darshan of the Dandayuthapani, a beautiful picture of lord Murugan grabbed his eyes. He was mesmerized by it. He considered it a priceless possession and brought it home to Chennai. He placed it in his home and put a thatched roof over it. He asked his family to shift elsewhere and considered it the very sacred abode, the Palani. He became known for his “Arul Vaakku” in his trance during pooja. He is also known as Pavadam since he offered his tongue to Lord Muruga and took the Pavadam.

    This picture can still be seen in the temple today. And the main idol of Lord Muruga in this temple is designed based on this picture.

    He was followed by Rathinasamy thambiran and his diciple Bagyalinga Thambiran in his service to Lord Muruga. The Samadis of all three Sitthars who worked towards building the sacred temple is situated in Nerkundram. The Siddarkal Alayamn is constructed to enable devotees to visit the Samadhis of all three Siddars at the same time. There are special Poojas conducted every Pournami. The Guru Pooja is also a specialty here.

     

    It is strongly believed that those who are unable to lead a pilgrimage to the Palani can very well visit the Vadapalni temple. Devotees, senior citizens who are unable to visit Palani can visit the Vadapalani temple here in Chennai and give their offerings that they had prayed for the Palani Murugan.