Tag: Lakashmi

  • Navarthiri Lakashmi Mandiram

    மலரின் மேவு திருவே– உன் மேல்
    மையல் பொங்கி நின்றேன்;
    நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
    நினைவழிக்கும் விழியும்
    கலக லென்ற மொழியும்-தெய்வக்
    களிதுலங்கு நகையும்
    இலகு செல்வவடிவும்- கண்டுன்
    இன்பம் வேண்டுகின்றேன்

    திருமகளை சரண் புகுதல்

    பொன்னிலும் மணிகளிலும்- நறும்
    பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
    கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
    காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
    முன்னிய துணிவினிலும் -மன்னர்
    முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
    பன்னிநற் புகழ்பாடி- அவள்
    பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.