Tag: Kulasekarapattinam

  • Kulasekarapattinam Dusera

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் – அருள்வந்து ஆக்ரோசமாக ஆடும் காளி வேடமணிந்த பக்தர்கள்.

    திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு உலகபுகழ்பெற்றதாகும். இந்த திருவிழா கடந்த 29ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விரதமிருக்கும் பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டிய பின்னர் காளி , அம்மன், ஆஞ்சநேயர் , விலங்குகள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு வகையான வேடங்கள் அணிவது இத்திருவிழாவின் சிறப்பாகும்.மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடம் அணிந்தவர்கள் தத்ரூபமாக நடந்துகொள்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    வேடமணிந்த பக்தர்கள் குழுவாக இணைந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். இதில் 15 லட்சம் பக்தர்கள்வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • Kulasekarapattinam Dasara Nalai Kodiyetraam

    உலகப்புகழ்பெற்ற  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத்  தொடங்குகிறது .

      தசரா திருவிழாவிற்கு  புகழ்பெற்ற மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சரியாக கொண்டாடப்பட்டுவருகிது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு இங்கு தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

    இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  தொடரந்து பத்து நாட்கள் வெகு விமர்சரியாக நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை கொடியேற்றத்தினை தொடர்ந்து  விரதமிருந்து வரும் பக்தர்கள்  காப்பு அணிந்து  தாங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தாங்கள் விரும்பும் வேடங்களான அம்மன் வேடம்,  காளி வேடம்,  ஆஞ்சநேயர் , குரங்கு,  கரடி மற்றும் சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்று காணிக்கை எடுத்து தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் திருநாளன்று நடைபெறும்.

    மகிசாசூரசம்காரம் அன்று கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.  தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி குலசேகரன்பட்டிணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.