Tag: Kuberan

  • Kuberan 108 pottri

    செல்வ கடவுளான குபேரனை வணங்கி இந்த  போற்றிகளை உச்சரித்து வழிபட்டால் செல்வ நிலை உயரும் வாழ்வில் சுபிட்சம் பெருகும்

     அளகாபுரி அரசே போற்றி
    ஆனந்தம் தரும் அருளே போற்றி
    இன்பவளம் அளிப்பாய் போற்றி
    ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    உகந்து அளிக்கும் உண்மையே போற்றி

    ஊக்கம் அளிப்பவனே போற்றி
    எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
    ஓங்கார பக்தனே போற்றி
    கருத்தில் நிறைந்தவனே போற்றி
    கனகராஜனே போற்றி
    கனகரத்தினமே போற்றி 
    காசு மாலை அணிந்தவனே போற்றி
    கிந்நரர்கள் தலைவனே போற்றி
    கீர்த்தி அளிப்பவனே போற்றி
    கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    குருவாரப் பிரியனே போற்றி

    குணம் தரும் குபேரா போற்றி
    குறை தீர்க்கும் குபேரா போற்றி
    கும்பத்தில் உறைபவனே போற்றி
    குண்டலம் அணிந்தவனே போற்றி
    குபேர லோக நாயகனே போற்றி
    குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    கோடி நிதி அளிப்பவனே போற்றி
    சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
    சங்கரர் தோழனே போற்றி
    சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    சமயத்தில் அருள்பவனே போற்றி
    சத்திய சொரூபனே போற்றி

    சாந்த சொரூபனே போற்றி
    சித்ரலேகா பிரியனே போற்றி
    சித்ரலேகா மணாளனே போற்றி
    சிந்தையில் உறைபவனே போற்றி
    சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
    சிவபூஜை பிரியனே போற்றி
    சிவ பக்த நாயகனே போற்றி
    சிவ மகா பக்தனே போற்றி
    சுந்தரர் பிரியனே போற்றி
    சுந்தர நாயகனே போற்றி
    சூர்பனகா சகோதரனே போற்றி
    செந்தாமரைப் பிரியனே போற்றி

    செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
    சொக்கநாதர் பிரியனே போற்றி
    சௌந்தர்ய ராஜனே போற்றி
    ஞான குபேரனே போற்றி
    தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    திருவிழி அழகனே போற்றி
    திருவுரு அழகனே போற்றி
    திருவிளக்கில் உறைவாய் போற்றி

    திருநீறு அணிபவனே போற்றி
    தீயவை அகற்றுவாய் போற்றி
    துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    தூயமனம் படைத்தவனே போற்றி
    தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    தேவராஜனே போற்றி
    பதுமநிதி பெற்றவனே போற்றி
    பரவச நாயகனே போற்றி
    பச்சை நிறப் பிரியனே போற்றி
    பவுர்ணமி நாயகனே போற்றி
    புண்ணிய ஆத்மனே போற்றி
    புண்ணியம் அளிப்பவனே போற்றி
    புண்ணிய புத்திரனே போற்றி

    பொன்னிற முடையோனே போற்றி
    பொன் நகை அணிபவனே போற்றி
    புன்னகை அரசே போற்றி
    பொறுமை கொடுப்பவனே போற்றி
    போகம்பல அளிப்பவனே போற்றி
    மங்கல முடையோனே போற்றி
    மங்களம் அளிப்பவனே போற்றி
    மங்களத்தில் உறைவாய் போற்றி
    மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    முத்து மாலை அணிபவனே போற்றி
    மோகன நாயகனே போற்றி
    வறுமை தீர்ப்பவனே போற்றி
    வரம் பல அருள்பவனே போற்றி

    விஜயம் தரும் விவேகனே போற்றி
    வேதம் போற்றும் வித்தகா போற்றி
    வைர மாலை அணிபவனே போற்றி
    வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    நடராஜர் பிரியனே போற்றி
    நவதான்யம் அளிப்பவனே போற்றி
    நவரத்தினப் பிரியனே போற்றி
    நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    ராவணன் சோதரனே போற்றி
    வடதிசை அதிபதியே போற்றி
    ரிஷி புத்திரனே போற்றி

    ருத்திரப் பிரியனே போற்றி
    இருள் நீக்கும் இன்பனே போற்றி
    வெண்குதிரை வாகனனே போற்றி
    கைலாயப் பிரியனே போற்றி
    மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    மணிமகுடம் தரித்தவனே போற்றி
    மாட்சிப் பொருளோனே போற்றி
    யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    யௌவன நாயகனே போற்றி
    வல்லமை பெற்றவனே போற்றி
    ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    குபேரா போற்றி போற்றி
     

  • Kuberan 108 Pottri

    செல்வ கடவுளான குபேரனை வணங்கி இந்த  போற்றிகளை உச்சரித்து வழிபட்டால் செல்வ நிலை உயரும் வாழ்வில் சுபிட்சம் பெருகும்

     அளகாபுரி அரசே போற்றி
    ஆனந்தம் தரும் அருளே போற்றி
    இன்பவளம் அளிப்பாய் போற்றி
    ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    ஊக்கம் அளிப்பவனே போற்றி
    எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    ஒன்பது நிதி பெற்றவனே போற்றி

    ஓங்கார பக்தனே போற்றி
    கருத்தில் நிறைந்தவனே போற்றி
    கனகராஜனே போற்றி
    கனகரத்தினமே போற்றி 
    காசு மாலை அணிந்தவனே போற்றி
    கிந்நரர்கள் தலைவனே போற்றி
    கீர்த்தி அளிப்பவனே போற்றி
    கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    குருவாரப் பிரியனே போற்றி

    குணம் தரும் குபேரா போற்றி
    குறை தீர்க்கும் குபேரா போற்றி
    கும்பத்தில் உறைபவனே போற்றி
    குண்டலம் அணிந்தவனே போற்றி
    குபேர லோக நாயகனே போற்றி
    குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    கோடி நிதி அளிப்பவனே போற்றி
    சங்க நிதியைப் பெற்றவனே போற்றி

    சங்கரர் தோழனே போற்றி
    சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    சமயத்தில் அருள்பவனே போற்றி
    சத்திய சொரூபனே போற்றி
    சாந்த சொரூபனே போற்றி
    சித்ரலேகா பிரியனே போற்றி
    சித்ரலேகா மணாளனே போற்றி
    சிந்தையில் உறைபவனே போற்றி
    சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி

    சிவபூஜை பிரியனே போற்றி
    சிவ பக்த நாயகனே போற்றி
    சிவ மகா பக்தனே போற்றி
    சுந்தரர் பிரியனே போற்றி
    சுந்தர நாயகனே போற்றி
    சூர்பனகா சகோதரனே போற்றி
    செந்தாமரைப் பிரியனே போற்றி
    செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    சொர்ணவளம் அளிப்பவனே போற்றி

    சொக்கநாதர் பிரியனே போற்றி
    சௌந்தர்ய ராஜனே போற்றி
    ஞான குபேரனே போற்றி
    தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    திருவிழி அழகனே போற்றி
    திருவுரு அழகனே போற்றி
    திருவிளக்கில் உறைவாய் போற்றி
    திருநீறு அணிபவனே போற்றி

    தீயவை அகற்றுவாய் போற்றி
    துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    தூயமனம் படைத்தவனே போற்றி
    தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    தேவராஜனே போற்றி
    பதுமநிதி பெற்றவனே போற்றி
    பரவச நாயகனே போற்றி
    பச்சை நிறப் பிரியனே போற்றி
    பவுர்ணமி நாயகனே போற்றி
    புண்ணிய ஆத்மனே போற்றி

    புண்ணியம் அளிப்பவனே போற்றி
    புண்ணிய புத்திரனே போற்றி
    பொன்னிற முடையோனே போற்றி
    பொன் நகை அணிபவனே போற்றி
    புன்னகை அரசே போற்றி
    பொறுமை கொடுப்பவனே போற்றி
    போகம்பல அளிப்பவனே போற்றி
    மங்கல முடையோனே போற்றி
    மங்களம் அளிப்பவனே போற்றி
    மங்களத்தில் உறைவாய் போற்றி

    மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    முத்து மாலை அணிபவனே போற்றி
    மோகன நாயகனே போற்றி
    வறுமை தீர்ப்பவனே போற்றி
    வரம் பல அருள்பவனே போற்றி
    விஜயம் தரும் விவேகனே போற்றி
    வேதம் போற்றும் வித்தகா போற்றி
    வைர மாலை அணிபவனே போற்றி
    வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    நடராஜர் பிரியனே போற்றி

    நவதான்யம் அளிப்பவனே போற்றி
    நவரத்தினப் பிரியனே போற்றி
    நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    ராவணன் சோதரனே போற்றி
    வடதிசை அதிபதியே போற்றி
    ரிஷி புத்திரனே போற்றி
    ருத்திரப் பிரியனே போற்றி
    இருள் நீக்கும் இன்பனே போற்றி

    வெண்குதிரை வாகனனே போற்றி
    கைலாயப் பிரியனே போற்றி
    மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    மணிமகுடம் தரித்தவனே போற்றி
    மாட்சிப் பொருளோனே போற்றி
    யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    யௌவன நாயகனே போற்றி
    வல்லமை பெற்றவனே போற்றி
    ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    குபேரா போற்றி போற்றி
     

     

  • Kuberan Poojai Palangal

    குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    வெள்ளிக்கிழமை காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதையெல்லாம் எடுத்து பூஜையில் வைக்க வேண்டும். குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காம, சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும். 

    அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வெச்சு, சுற்றிலும் மாவிலையைச் செருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் எல்லாத்தையும் கலசத்துக்கு முன்பு வையுங்கள். 

    மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிறகு படம், யந்த்ரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூ, மாலை போடவும் ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். 

    கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும், பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனைப் பற்றிய ஸ்லோகம், மந்த்ரம், துதி ஆகியவற்றைக் கூறவும், எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். 

    வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும் தட்சணை பணத்தை ஏழைகளுக்கும் கொடுக்கவும். இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் எப்போழுது வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது.