Tag: Kamatchi Amman

  • Kanchi Kamatchi amman koil pal kudam

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி பால்குட விழா.

    உலகப் பிரசித்தி பெற்ற சக்தி பீடத்தின் முக்கிய ஸ்தலமான காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம் அதனை ஒட்டி இன்று காஞ்சிபுரம் சங்கரமடம் காமாட்சி அம்மன் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 700-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி சங்கர மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால்குடங்கள் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்குபெற்றனர்

  • Kanchi Kamatchi Amman Koil

    காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். அவளது மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்; கீழிரு கரங் களில் கரும்புவில், புஷ்பபாணம் ஏந்தியருள்கிறாள். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஸ்ரீசக்ரத்தில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை தேவியின் வஸின்யாதி வாக்தேவதைகள் வீற்றருள்கின்றனர். மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சாந்தமான காமாக்ஷியாக ஆதிசங்கரர் சாந்தப்ப டுத்தினார். 

    இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். கோயிலின் உள்ளே பிராகாரங்களும், தெப்பக்குளமும், நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கருவறை கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.

    ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒட்டியாண பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான கள்வர் சந்நதியும் இங்கு இருப்பது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்த லஹரி பாடினார். அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று. மூல கருவறையில் காமாட்சி அமர்ந்த நிலையில் அருள, உற்சவ காமாட்சி நின்ற நிலையில் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதியோடு தரிசனம் அளிக்கிறாள். 

    இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிசங்கரருக்கு இக்கோயிலில் தனிச் சந்நதி உண்டு. 

    உற்சவ காமாட்சி ஆலயத்தை விட்டு வெளியே ஊர்வலம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் ஆதிசங்கரர் சந்நதியில் நின்று அனுமதி கேட்டு விட்டே செல்வதும், வருவதும் இத்தல அற்புதம். இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி,  பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷம் ஏற்படுவதில்லை. 
     

  • Mangadu Kamatchi Amman Kalasa Abishegam

    சென்னை மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு,அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகப் பூஜை வெகுவிமரிசையாக நடந்தது.

    சென்னை அடுத்த மாங்காட்டில், பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.அம்மனின் திரு நட்சத்திரமான பூரம் நட்சத்திர தினமான  ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இக்கோவிலில், 1,008 கலச அபிஷேகம் கடந்த மூன்று நாட்களாக  நடைபெற்று வருகிறது.

    இதனால்  காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் , பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். மூன்றாம் நாளான இன்று நான்காம் கால  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.இதில் வேதவிற்பனர்கள் மத்திரங்கள் முழங்க மஹாபூர்ணாதி நடத்தினர்.

    பின்னர்  அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றன.

    இதில்  பல்வேறு பகுதி களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், அம்மனுக்கு மாலையாக சாத்தப் பட்டது.நிகழ்ச்சியில் ஆலய பரம்பரை தர்மகர்த்தா மருத்துவர் சீனிவாசன்,அறநிலைத் துறை துணை ஆணையர் கவிதா பிரியதர்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.