Tag: Kamakshi

  • Kamakshi Karunai Petren 2

    மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

    என் பெயர் திருமதி சிவராமன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மிக சிலரே. அவர்களில் ஒருவர் தான் கீது வாட்ஸ். பிரசன்னம் பார்ப்பதிலும் நியுமராலஜி கணிப்பதிலும் மிகவும் வல்லவர். அவர்களிடம் நமது பிரச்சனையை சொன்னால் அதை மிக எளிய முறையில் பரிகாரங்கள் மூலம் தீர்த்து வைக்கின்றார். அவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    என் மகளின் ஜாதகத்தை பார்த்து இந்த தேதியில், இந்த கிழமையில், இந்த நட்சத்திரத்தில் முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்னார். அதேபோல என் மகளுக்கு முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. என் மகளும், பேத்தியும், மருமகனும் வெளிநாடு எப்போது செல்வார்கள் என்பதையும் கணித்து சொன்னார். சொன்ன சொல் அப்படியே பலித்தது. என் குடும்ப நண்பர் ஒருவர், வீட்டு பிரச்சனைகளால் மிரண்டு போயிருந்தார். என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லி கீது வாட்ஸை அணுகச் சொன்னேன். என் நண்பரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் சொல்லும் சில எளிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தாலே கை மேல் பலன் கிடைக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அவர்கள் சொன்ன பரிகாரங்கள் மிகுந்த பலனை அளித்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில பிரச்சனைகளோடு அவரை ஒரு முறை சந்தித்தேன். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை செய்ய சொன்னார்கள். அந்த பூஜையை மூன்று மாதம் தொடர்ந்து செய்த பிறகு என் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடந்தது. நடக்கவே நடக்காதென்று எதையெல்லாம் நான் நினைத்திருந்தேனோ அது எல்லாம் நடந்தது. நன்றி.

    -சவுதியிலிருந்து திருமதி. சிவராமன்

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

  • Kamakshi Amman Karunai Petren

    மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, 

    முரளிதரன் எழுதிக் கொள்வது… வணக்கம், எங்களுடைய ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க வைத்தோம். நல்லா படித்துக் கொண்டிருந்த எனது மகன் சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாதை மாறிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் நான் தங்களை சந்தித்தேன்.

    நீங்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி இருக்கிறதா என்று கேட்டீர்கள். அதுவும் (பல வருடங்களுக்கு முன்) நீங்கள் கேட்கும்போது எனக்கு  நினைவுக்கு வரவில்லை. 1 வாரம் கழித்து உங்களை போனில் தொடர்பு கொண்டு நான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை கூறினேன்.

    எங்கள் சொந்த ஊர் மதுரை. நான் ரொம்ப நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்த போது, வேலை கிடைத்தால் மீனாட்சி அம்மனுக்கு என்னுடைய ஒரு மாத சம்பளம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டினேன். நீங்கள் உடனே அந்த காணிக்கையை செலுத்திவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறினீர்கள். அப்போது என்னுடைய சம்பளம் ரூ.150/- மட்டும். இன்று என்னுடைய சம்பளம் ரூ.15,000/-. இதை நான் உங்களிடம் கேட்கும் போது 21 வருடங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதை வட்டியும், முதலுமாக செலுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினீர்கள். நானும் 2 மாதங்கள் கழித்து செலுத்திவிட்டேன்.

    என்ன ஆச்சர்யம், இந்த காணிக்கையை செலுத்துவதற்கு முன்பே என் மகனிடம் நல்ல மாற்றங்களை பார்த்தேன். இன்று என் பையன் வடநாட்டில் தனியார் தொலைக்காட்சியில் நல்ல பதவியில் இருக்கிறார். என்னுடைய மகனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த தங்களுக்கும், நீங்கள் வணங்கும் காமாட்சிக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீனாட்சிக்கு நான் வேண்டிக்கொண்டதை காமாட்சி நினைவுபடுத்தி என்னுடைய இன்னல்களை போக்கி வைத்தார்.

    நன்றி…

    இப்படிக்கு முரளிதரன்.

     

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257