Tag: Kalyanam

  • Perumal Kalyanam

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில்  திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் உற்சவ மூர்த்தி தேகளீசபெருமாள்  ஆண்டு தோறும் கடலூரில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி திருக்கோவிலில் இருந்து கடலூருக்குக்கு வருகை தந்தார். தீர்த்தவாரிக் கு பிறகு திருக்கோவி லூருக்கு திரும்பும் வழியில் திருவதிகை ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீசபெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சூடி கொடுத்த சுடர் கொடியால்ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து மாலைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
     
    இதில் ஆலய திருப்பணி குழு தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் தொழிலதிபர்கள் சீனுவாசன்,  அரசியல் கட்சி பிரமுகர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொதுமக்கள்  ஆகியோர் கலந்து கொண்டன இதற்கான ஏற்பாடுகளை இந்து சமுதாய ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகள்,தாமரை பூ குழுவினர் திருக்கோவில் பணியாளர்கள்  சிறப்பாக செய்து இருந்தனர். 

  • Thiruthani vallammai Kalyanam

    திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாள் அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். 

    முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை  சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.