Tag: happiness

  • Is the broom Mahalakshmi…?

    வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படும் துடைப்பத்துக்கு முக்கிய இடமுண்டு. இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், துடைப்பத்தை மரியாதையுடன் கையாள்வது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பை வீட்டில் நிலைநிறுத்தும். துடைப்பம் வாங்கும் நாள், பயன்பாடு, பராமரிப்பு முதல் பழையவற்றை அகற்றுவது வரை குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது மகாலட்சுமியின் அருளைப் பெற உதவி புரியும்.

    துடைப்பம் வாங்கும் நாள்: செவ்வாய் அல்லது சனிக்கிழமைகள், குறிப்பாக தேய்பிறை நாட்களில், துடைப்பம் வாங்குவது மங்களகரமாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி முடிந்த பிறகு இந்நாட்களில் வாங்கினால், மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும். இது வீட்டில் பொருளாதார மேம்பாடு, செல்வ வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய துடைப்பத்தை கனவில் கண்டால், அது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும், வீட்டில் மகிழ்ச்சி, நிம்மதி நிலவுவதற்கான அடையாளமாகவும் வாஸ்து கூறுகிறது.

    பயன்பாட்டு விதிகள்: துடைப்பம் மகாலட்சுமியை மகிழ்விக்கும் பொருளாக இருப்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை பெருக்கும்போது முடிகள், தூசி சிக்கியிருந்தால், அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டு, துடைப்பத்தை சுத்தப்படுத்த வேண்டும். துடைப்பத்தை கால் படாத இடத்தில், மறைவாக வைக்க வேண்டும். பிறர் அதைப் பார்ப்பது செல்வத்துக்கு நல்லதல்ல. துடைப்பத்தை காலால் மிதிப்பது, ஒருவரை அதைக் கொண்டு அடிப்பது மகாலட்சுமியின் கோபத்தை வரவழைக்கும்.

    வீட்டை சுத்தப்படுத்திய பிறகு, துடைப்பத்தை தலைகீழாக வைப்பது தவறு. இது வீட்டில் சண்டை, பதற்றத்தை அதிகரிக்கும். எப்போதும் நேராக, சரியான இடத்தில் வைப்பது நேர்மறை சக்தியைப் பரப்பும். இரவில், குறிப்பாக சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, விளக்கேற்றிய பின் வீடு பெருக்குவது மகாலட்சுமியின் அருளைக் குறைக்கும். மேலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்ற உடனே பெருக்குவதைத் தவிர்க்கவும்; ஒரு மணி நேரம் கழித்து பெருக்குவது நல்லது.

    பழைய துடைப்பத்தின் பயன்பாடு: பழைய துடைப்பத்தை வீட்டில் விட்டுவிட்டு புதிய வீட்டுக்கு செல்வது தவறு. இது மகாலட்சுமியை பழைய வீட்டிலேயே விட்டுவிடுவதாக அர்த்தம். பயன்படுத்திய துடைப்பத்தை தானமாகவோ, பிறர் பயன்படுத்தவோ கொடுக்கக் கூடாது. இயற்கையான துடைப்பங்கள் (எ.கா., தென்னங்குச்சி, பூந்துடைப்பம்) பயன்படுத்துவது சிறந்தது. இவற்றை வெட்ட வெளியில் எரித்து சாம்பலாக்கலாம். செவ்வாய், வெள்ளி நாட்களில் குப்பையில் போடுவதைத் தவிர்க்கவும். பறவைகள் துடைப்பக் குச்சிகளை கூடு கட்ட எடுத்தால், அது குடும்பத்துக்கு நற்பலனைத் தரும் என சாஸ்திரம் கூறுகிறது.

    மகாலட்சுமியின் மரியாதை: துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் முறம் சுத்தத்தின் அடையாளங்கள். இவற்றை மரியாதையுடன் கையாள்வது மகாலட்சுமியை மகிழ்விக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது செல்வ தேவியின் அருளை நிலைநிறுத்தும். துடைப்பத்தை வாங்குவது, பயன்படுத்துவது, அகற்றுவது ஆகியவற்றில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டில் நேர்மறை சக்தி, பொருளாதார வளர்ச்சி, மன நிம்மதியை உறுதி செய்யும்.

  • A simple offering to relieve mental anguish: Trimidura worship!

    குடும்பத்தில் மனச் சஞ்சலங்கள், பொருளாதார பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் நீங்கி, இனிமையான வாழ்வு பெற ஒரு எளிய நிவேதன வழிபாடு பற்றி ஞான நூல்கள் பரிந்துரைக்கின்றன.

    தினமும் வீட்டு பூஜையறையில் உள்ள இஷ்ட தெய்வத்திற்கு பசும்பால், வாழைப்பழம், தேன் ஆகிய மூன்றையும் கலந்து நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இந்த கலவையை ‘திரிமதுரம்’ என்று சிறப்பாக அழைப்பர். திரிமதுர நிவேதனம் செய்து வழிபட்டால், வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, இனிமையும் மகிழ்ச்சியும் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    இந்த வழிபாடு மிகவும் எளிமையானது மற்றும் அனைவராலும் செய்யக்கூடியது. பசும்பால், வாழைப்பழம், தேன் ஆகியவை இயற்கையான பொருட்கள் என்பதால், இவை தெய்வத்திற்கு படைப்பதால் மன அமைதியும், நேர்மறை ஆற்றலும் பெறலாம். இந்த திரிமதுர நிவேதனத்தை படைத்த பிறகு, வழிபாட்டை முடித்து, அந்த பிரசாதத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணலாம்.

    சமூக வலைதளங்களில் இந்த வழிபாடு குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த எளிய நிவேதனம், மனதில் உள்ள பதற்றத்தை நீக்கி, குடும்பத்தில் ஒற்றுமையையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வதால், வாழ்வில் அமைதியும் செழிப்பும் பெருகும்.

  • Do this to remove negative energy and evil eye from your home!

    வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை, சச்சரவுகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். இதை தடுக்க, கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டு வாசலில் கட்டி வைப்பது அல்லது தொட்டிகளில் வளர்ப்பது வழக்கம். கற்றாழை உடல், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பணப்பிரச்சினை மற்றும் குடும்ப சண்டைகளை போக்கும் ஆற்றலையும் கொண்டது.

    நேர்மறை ஆற்றல் பெருகும்: கற்றாழை செடி உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற தாவரம். இதன் சிறப்பை உணர்ந்து, பலரும் இன்று வீடுகளில் துளசி செடியைப் போல கற்றாழையையும் தொட்டிகளில் வளர்க்கின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி, சரியான திசையில் கற்றாழை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால், வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

    அதிர்ஷ்டம் தரும் கற்றாழை: ஆலோவேரா என்று அழைக்கப்படும் கற்றாழை, அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது. வீட்டு வாசலில் கற்றாழை கட்டி வைப்பதால் கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் நுழையாது. இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும்.

    மகிழ்ச்சி மற்றும் நிம்மதி: கிராமங்களில் வீட்டு வேலிகளை சுற்றி கற்றாழை வளர்ப்பது பாம்பு போன்ற விஷ ஜந்துகளை தடுக்க உதவும். வீடு சண்டைகளால் போர்க்களமாக இருந்தால், கற்றாழை வளர்ப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அதிகரிக்கும்.

    பதவி உயர்வு மற்றும் பண வரவு: பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பவர்கள், கற்றாழையை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வளர்த்தால் மன அமைதி பெறலாம். மேற்கு திசையில் வளர்த்தால் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, பண வரவு அதிகரிக்கும்.

    கற்றாழை பரிகாரம்: பண வரவை அதிகரிக்க, கற்றாழையை வாசல் அல்லது பால்கனியில் தொட்டியில் வளர்க்கலாம். பரிகாரத்திற்காக வளர்க்கும் கற்றாழையை வெட்டக்கூடாது. தினமும் தண்ணீர் ஊற்றி, குல தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.

    புதன் கிழமை பரிகாரம்: தாமிர பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்து, சிறிது சோம்பு, ஒரு ஏலக்காய், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து, இரவு பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் காலை குளித்து, சாமி கும்பிட்ட பின், அந்த தண்ணீரை கற்றாழைக்கு ஊற்றவும். இதனால், பண வரவு அதிகரிக்கும், கடன் பிரச்சினைகள் தீரும். நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

  • What is Consciousness?

    Consciousness refers to individual awareness of unique thoughts, memories, feelings, sensations, and environments. Essentially, your consciousness is your awareness of yourself and the world around you. This awareness is subjective and unique to you.

    The Sanskrit word, Chaitanya, means 'consciousness' or 'spirit' or 'intelligence' or 'sensation'. It is the pure Consciousness or the cosmic intelligence, the consciousness that knows itself and also knows others. It also means energy or enthusiasm.

    In other words, your consciousness is made up of its content. The content is your education, your attachment to furniture, to the family, to your name, to the tradition, to your particular experience, identification with a country or your house, the gods you have invented. When you are attached to your furniture, your furniture is part of your consciousness. When you are frightened, when you are ambitious, greedy, envious, all that makes up your consciousness.

    So, in a spiritual context, everything that makes you feel alive is what feeds your consciousness. In turn, it fuels your energy. So, every choice you make, every conversation, of every waking hour – even the silence in between – has its own impact and fulfils its due course in your life's journey.

    This realization is the key to upliftment. You are in control of shaping this dimension of your life. Therefore, make wise choices; live consciously.