Tag: Gayathri Mandiram

  • pagaivarai vella gayathri mandiram

    ஜ்வாலாமாலினி
    (பகைவரை வெல்ல)
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹா ஜ்வாலாயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    ஜேஷ்டலக்ஷ்மி
    (மந்திர சக்தி பெற)
     
    ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
    நீலஜேஷ்டாயை தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    துவரிதா
     
    ஓம் த்வரிதாயை வித்மஹே
    மஹாநித்யாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    தாராதேவி
     
    ஓம் தாராயை ச வித்மஹே
    மனோக்ரஹாயை தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    திரிபுரசுந்தரி
     
    ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
    க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
     
    ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
    க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
     
    மஹா திரிபுரசுந்தரி
     
    ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
    சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்
     

  • Arul tharum gayathri mandiram

    ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..

    விநாயகர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    தந்நோ தந்தி ப்ரசோதயாத்

    ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹா சேநாய தீமஹி
    தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

    ஓம் (குலதெய்வம்) நமஹ

    ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ

    சூரிய பகவானின் காயத்ரி

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    புதன் காயத்ரி
    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
     

  • Murugan Gayathri mandiram

    ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

    முருகப்பெருமான் காயத்ரி மந்திரம்
    முருகப்பெருமான்
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாஸேனாய தீமஹி
    தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

    பொது பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

  • Anjaneyar Gayathri mandiram

    ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். 

    `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,  
    வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
    ஹனுமன் ப்ரசோதயாத்' 

    என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 

    ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். 
     

  • Gayathri Mandirathinai Japipadhan Payangal

    மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

    ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

    11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

    31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

    62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.
     

  • Gayathri mandiram

    இந்த பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின் ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக நம் முன்னோர் கருதுகின்றனர் . அதனால் தான் அவரவர் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    சூரியன்
    ( கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சந்திரன்
    ( ஞானம் வளர)

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே
    ஹேமரூபாய தீமஹி
    தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

    அங்காரகன்
    ( செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

    புதன்
    ( படிப்பும் , அறிவும் பெற)

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

    குரு
    ( நல்ல மனைவி அமைய)

    ஓம் குருதேவாய வித்மஹே
    பரப்ரஹ்மாய தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    சுக்கிரன்
    ( தடைபட்ட திருமணம் நடக்க)

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    தனு ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

    சனி பகவான்
    ( வீடு , மனை வாங்க)

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ராகு
    ( நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

    ஓம் நகத்வஜாய வித்மஹே
    பத்மஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

    கேது
    ( துஷ்ட சக்திகளை விரட்டிட)

    ஓம் அம்வத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரசோதயாத்

    நமக்கு வரும் வினைகளை முற்றிலும் தவிர்க்க இயலாத போதிலும் , அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும் . நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜபிப்பதினால் நற் பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு 

  • Sai baba Gayathri Mandiram

    மதங்களை கடந்து அணைவராலும் வணங்கப்படுபவர் சாய் பாபா. கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து அவர்களின் துன்பத்தை துடைப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் சாய் பாபாவை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் உச்சரிப்பது மேலும் சிறப்பானதாக அமையப்பெறும்

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே..

    சச்சிதானந்தாய தீமஹி..

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினசரி 11 முறை அல்லது 33 முறை அல்லது 108 முறை செபிப்பது உகந்தது. தினசரி ஜெபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிடைக்கப்பெற்று வளமுடன் வாழ்வர்.
     

  • Murugan Gayathri Mandiram

    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.

    வாழ்வை வளமாக்கும் முருகன் காயத்ரி மந்திரம்

    ஓம் தத் புருசாய வித்மஹே 
    மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

     
    இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.  
     

  • Gayathri Mandiram

    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.

    இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. 

    காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

    தத் – வெற்றி
    ச – வீரம்
    வி – பராமரிப்பு
    து – நன்மை
    வ – ஒற்றுமை
    ரி – அன்பு
    நி – பணம்
    யம் – அறிவு
    ஃபர் – பாதுகாப்பு
    க்கோ – ஞானம்
    த்தி – அழுத்தம்
    வா – பக்தி
    ஸ்யா – நினைவாற்றல்
    ஃத்தி – மூச்சு
    மா – சுய ஒழுக்கம்
    யோ- விழிப்புணர்வு
    யோ- உருவாக்குதல்
    நஹ- இனிமை
    பரா- நல்லது
    சோ- தைரியம்
    த்தா- ஞானம்
    யட் – சேவை

    காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.