ஆகஸ்ட் 14 – கருட ஜெயந்தி
பிலவ வருடம் – ஆடி 29
கருட ஜெயந்தி
14-ஆக-2021 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி ம 12.23
நட்சத்திரம் : சித்திரை கா 8.09
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: Garuda Jayanthi
-
August 14 2021 Garuda jayanthi
-
August 7 Garuda Jayanthi
ஆகஸ்ட் 7 – கருட ஜெயந்தி
விகாரி வருடம் – ஆடி 22
கருட ஜெயந்தி
07-ஆக-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 5.37
நட்சத்திரம் : சுவாதி இ 3.39
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Garuda Jayanthi
தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?
ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.
புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் ஸர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நக்ஷத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.
ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.
சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள். 6. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.
பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.
கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.
ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்.
கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.
கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்
ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும் நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.
திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.
புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்
சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.கருடாழ்வாரை தரிசிக்கும்போது குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.