Tag: free ticket

  • Tirupathy 24 hrs free ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் 6 ஆயிரம் பக்தர்களுக்கு என 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன  டோக்கன் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது . கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில்  டோக்கன் களை பெறுவதற்காக  பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து நீண்ட வரிசையில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

    இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் விதமாக அமைந்தது. இதனால் இந்த இலவச தரிசன டோக்கன்  நிறுத்தப்பட்டு ஆன்லைனில் வழங்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் வந்தது. 

    இதற்கிடையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் 24 மணி நேரமும் திருப்பதி அலிலிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் என 24 மணி நேரமும் இந்த டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் நிறைவடைந்த பிறகு அதற்கு மறுநாள் உள்ள நாட்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் திருமலையில் அல்லது திருப்பதியில் தேவஸ்தான தங்கும் அறைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகமாக செயல்பட்டுவந்த விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக செயல்பட்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளதால் அந்த இரண்டு ஓய்வறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த ஒரு சிலரையும் பத்மாவதி பக்தர்கள் ஓய்வறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    எனவே இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இரண்டு ஓய்வறைகளும் பக்தர்கள் தங்குவதற்காக வாடகைக்கு  வழங்கப்பட உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் டிக்கெட் பெற்று ஓரிரு நாள் தங்கினாலும் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.