Tag: diwali

  • Vastu tips to attract Goddess Lakshmi to your home: Ways to increase wealth!

    பலரும் தங்கள் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்று விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைத்து, நிதி நிலையை மேம்படுத்தலாம்.

    இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு கட்டுவது முதல் அலங்காரம் வரை வாஸ்து முக்கியமானது. லட்சுமி தேவி வீட்டிற்கு வரும்போது கதவு, ஜன்னல்களை மூடுவது தவறு. சூரிய உதய நேரத்தில், பிரம்ம முகூர்த்த வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள் என்று ஐதீகம். இந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. சூரிய அஸ்தமன வேளையில் விளக்கு ஏற்றி, கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பதும் நேர்மறை ஆற்றலை வரவழைக்கும். இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் துளசி செடியருகே தீபம் ஏற்றினால், லட்சுமியின் அருள் கிடைக்கும். துளசி செடி புனிதமானது மற்றும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. துளசி செடியின் நறுமணம் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியாக வைத்து, எதிர்மறை ஆற்றலை தடுக்கும். வீட்டு வாசலில் துளசி செடியை வளர்ப்பது செல்வத்தை பெருக்கும்.

  • Diwali deepa vazhipadu en

    தீபாவளி பண்டிகையின் வயது ஒன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் விஜயநகர பேரரசு வேரூன்றியதும் அவர்கள்  பரவலாகப் பல ஊர்களில் குடியேறினார்கள். இவர்களுடைய முக்கியமான முதன்மையான பண்டிகைதான் தீபாவளி. தீப வழிபாடு இயற்கை வழிபாடாகும்.இது பண்டைய வழிபாடு முறையாகும். எனவே விஜய நகர பேரரசு மூலம் அறிமுகமான இந்த தீபாவளி பண்டிகை மெள்ள,மெள்ள தமிழக மக்களின் நாகரிகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது.

    ஒளி மனித உயிருக்கு இன்றியமையாதது. ஆதிகாலப் பிரபஞ்சத் தோற்றாத்தில் அணுக் கூட்டங்கள் கூடி ஒரு குழப்பமாக கடலோரத்தில்  மிதந்து  கொண்டிருந்த போது,அதில் சூரிய ஒளி பட்டு முதல் உயிர் தோன்றியது.உண்மையில் நாமெல்லாம் ஒளியின் புத்திரர்கள் தான்.

    சூரிய ஒளியின் கிரகணங்களை வாங்கி ,மரங்கள் இலைகளில் குளோரோபில்லைத் தோற்றுவித்து காய்,கனிகளை உண்ணத் தருகின்றன. சூரிய ஒளி இல்லையேல் கடல் நீர் ஆவியாகாது.மேகம் இல்லை, மழையில்லை.குடிக்க  நீர்ல்லாமல் போகும். ஒளி வியாதி கிருமிகளை அழிக்கிறது. ஒளி மூலம் தோல் வைட்ட மின்-டி பொருளைச் சேகரித்து எலும்பை உறுதியாக்குகிறது.

     ஒளியின்றி இருண்ட அறையில் ஒரு மனிதனைப் பலகாலம் அடைத்து வைத்தால்,அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.எனவே தான் இந்துக்கள் இவ்வொளி அருட்பெருஞ்சோதியாகவும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபமாகவும் வழிபடுகிறார்கள்.

     

     தீபாவளி என்றால் தீபம்+ஆவளி அதாவது  தீபங்களின் வரிசை என்று பொருள். இருளைக்கொண்டு ஒரு மலையை மறைக்கலாம்.ஆனால் மலையளவு இருளால் கூட சுடர் விட்டு எரியும்.ஒரு அகல் விளக்கை மறைக்க முடியாது. ஒவ்வொரு விளக்கையும் தனக்காக தன் குடும்பத்திற்காக,தன் உறவினர்களுக்காக,தன் ,தன் நண்பர்களுக்காக,தன் சமுகத்திற்காக வேண்டி வரிசை வரிசையாக ஏற்ற  வேண்டும்.

     அவ்விளக்கில் நல்லெண்ணைய்யை ஊற்றும் போது நமது நல்ல எண்ணங்களை அதில் பிரதிபலிக்க வேண்டும். எரியும் விளக்கை கவிழ்த்தாலும் தீபம் மேல் நோக்கியே இருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.   மனிதனின் லட்சியம் ,மேலும் மேலும்  உயர வேண்டும் என்பதை அது காட்டுகிறது. ஒரு தீபத்தை கொண்டு பல தீபங்களை ஏற்றுவது போல,நாமும் பல குடும்பங்களில் விளக்கேற்ற  வேண்டும்.

    உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் இறைவனை  நாம் வழிபடும் இடத்தில் எழுந்தருளச் செய்ய  தீபாவளி திருவிளக்கு வழிபாடு வழி செய்கிறது. விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அண்டத்தில் உள்ள ஐந்து பூதந்களையும்.உடலில் உள்ள ஐந்து பொறிகளையும் குறிப்பவை.விளக்கினை ஏற்றி அவ்வொளியால் கண்,காது,மூக்கு,வாய்,தோல் என்ற ஐம்பொறிகளையும் ஒளி பெற செய்ய வேண்டும் என்பதே அதன் நோக்கம் .சூரியன்,கணபதி,மகேஸ்வரர்,அம்பிகை விஷ்ணு என்ற ஐந்து தெய்வங்களை வணங்குவதாக இது பொருள் படும். விளக்கில் அடி பாகம்  பிரம்ம சொரூபம் என்றும், அதன் தண்டு விஷ்ணு பாகம் என்றும்,அதன் ஐந்து  முகங்கள் சிவ பாகம் என்றும் வர்ணிக்கப்படும்.

     தெய்வ தரிசனத்தில் ஒளியின் பங்கு பெரியது.இறைவன் அண்டத்தில் உள்ளவன்.அண்டம் என்றால் கருப்பு.தெய்வம் கருப்பு நிறம்.கிருஷ்ணம் என்றால் கருப்பு என்று பொருள்.அது கர்ப்பக்கிரகம் என்ற இருளில் வாழ்கிறது.  அதை தரிசிக்க கற்பூர ஒளியைக் காட்டுகிறோம். புருவ நடுவே விளங்குகிற விளக்கு,உடலின் நளாமில்லா சுரப்பியையும் அதன் நேர்க்கோட்டில் இருக்கிற இதயம்,நுரையீரலை  இயக்குகிற முகுலத்தையும் குறிக்கும்.

     இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு தீபாவளியில் ஒளி விளக்குகளையும்,நம்மோடு இணணந்த உயிர் விளக்குகளையும் வரிசை வரிசையாக ஏற்றுவோம்.நல்ல எண்ணெய் குளியலில் நல்ல எண்ணங்களில் திளைப்போம்.புத்தாடை உடுத்தி புதிய சிந்தனைகளை விதைத்து மகிழ்ச்சியோட கொண்டாடுவோம்.
     

  • diwali amavasai nonbu

    பண்டைய காலம் முதல் தீபாவளி நோன்பு மற்றும் அமாவாசை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். நோன்பு எடுக்கும் குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். 

    அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரையில் உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். 

    பூஜை பொருட்கள் வாங்க செல்லும் போது குளித்து முடித்து சுத்தமாக சென்று பூஜை பொருட்களை வாங்கி வருவார்கள். இந்த நோன்பு பண்டிகைக்காக பிரத்யேகமாக புதுவை பெரிய மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜை பொருட்கள் விற்கப்படும். குறிப்பாக நோன்பு பண்டிகைக்காக வில்வ பூ அதிகம் விற்பனை செய்யப்படும். மேலும் பல வண்ணங்களில் நோன்பு கயிறு விற்கப்படும். அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படும். 

    அதுபோல் எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருட்களை வாங்கி பூஜை செய்வார்கள். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வார்கள். அதிரசம் செய்ய முடியாதவர்கள் பூஜை பொருட்களுடன் வாழைப் பழங்களை வைத்து வழிபடுவார்கள்.