Tag: Dhanvanthri Peedam

  • Dhanvanthri peedam muperum yagam

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுயம்வர கலா பார்வதி, கந்தர்வராஜ, சந்தான கோபால யாகங்கள் நடைபெற உள்ளன.

    இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வராஜ யாகம் மற்றும் சந்தான கோபால யாகம் என முப்பெரும் யாகங்களாக நடைபெற இருக்கிறது.

    இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவக்கிரக பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டியும், பெண்கள் திருமணத்தடை நீங்க வேண்டியும், ஆண்கள் திருமணத்தடை நீங்க வேண்டியும் மஹா சங்கல்பம் நடைபெற்று சகல தோஷ நிவாரணத்திற்காக பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. 

    சுயம்வர கலா பார்வதி யாகம்

    சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாக இருக்க இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

    கந்தர்வராஜ யாகம்

    கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாக இருக்க இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

    சந்தான கோபால யாகம்

    சந்தான கோபால யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும். இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

    மேற்கண்ட நன்மைகள் பெற வருகிற 17.3.2022 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சகலவிதமான தோஷங்களும், சாபங்களும், நவக்கிரகங்களால் ஏற்படும் தடைகளும் நீங்கி, சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பட சுயம்வரகலா பார்வதி ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் மற்றும் சந்தான கோபால ஹோமம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் திருமணம் வேண்டி பங்கேற்கும் ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், குழந்தை வரம் வேண்டி பங்கேற்கும் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்யம் ஏற்பட நவநீத கிருஷ்ணர் வழிபாடும், வெண்ணை சாத்தும் வைபவமும் முப்பெரும் யாகங்களாக நடைபெறும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள், ஆண்கள் மற்றும் தம்பதிகள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    இராணிப்பேட்டை மாவட்டம்.
    தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203

  • Dhanvanthri Peedam Soolini Yagam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு வருகிற 26.11.2019 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    உறவுப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மன அழுத்தம், பதட்டம்‌ குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் நடைபெறும் இப்பெரும் சக்தி வாய்ந்த ஹோமம் துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது.

    இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு பெற்று, சகல திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் ஹோமம் சூலினி துர்கா ஹோமம் ஆகும். மேலும் தடைகள் நீங்கும், தீய சக்திகள் அகலும், முற்பிறவி சாபம் விலகும், பிதுர் தோஷம், சாபங்களை போக்கும் உன்னத யாகமே சூலினி துர்கா யாகமாகும். நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த சூலினி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.

    ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி தேவியின், ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அகலும் பெரும் சக்தி வாய்ந்த துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது. ஆகவே இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    மேற்கண்ட ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203