Tag: Devi

  • Vastu tips to attract Goddess Lakshmi to your home: Ways to increase wealth!

    பலரும் தங்கள் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்று விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவழைத்து, நிதி நிலையை மேம்படுத்தலாம்.

    இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு கட்டுவது முதல் அலங்காரம் வரை வாஸ்து முக்கியமானது. லட்சுமி தேவி வீட்டிற்கு வரும்போது கதவு, ஜன்னல்களை மூடுவது தவறு. சூரிய உதய நேரத்தில், பிரம்ம முகூர்த்த வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள் என்று ஐதீகம். இந்த நேரத்தில் கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. சூரிய அஸ்தமன வேளையில் விளக்கு ஏற்றி, கதவு, ஜன்னல்களை திறந்து வைப்பதும் நேர்மறை ஆற்றலை வரவழைக்கும். இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

    வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில் துளசி செடியருகே தீபம் ஏற்றினால், லட்சுமியின் அருள் கிடைக்கும். துளசி செடி புனிதமானது மற்றும் லட்சுமி தேவி வசிக்கும் இடமாக கருதப்படுகிறது. துளசி செடியின் நறுமணம் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியாக வைத்து, எதிர்மறை ஆற்றலை தடுக்கும். வீட்டு வாசலில் துளசி செடியை வளர்ப்பது செல்வத்தை பெருக்கும்.

  • Saraswathi Devi Gayathri Mandiram

    வேத ஸ்வரூபியான பகவான் ஸ்ரீ ஹயக்ரீவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்களை  நாள்தோறும் சொல்லலாம்.

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
    தேவி சரஸ்வதி! உனக்கு நமஸ்காரங்கள்.
    வரம் தருபவளே!வேண்டியவற்றைத் தருபவளே!
    கல்வித் தொடக்கத்தை செய்கிறேன்.
    அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

    இதனை தினமும் ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    பொருள்: பிரம்ம சக்தியை அறிவோம்.  சரஸ்வதி தேவியை தியானம் செய்வோம். அவள் நமக்கு ஊக்கம் தந்து அருள்புரிவாளாக. சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான  பலன்களை அன்னை நமக்கு தந்தருள்வாள்.