Tag: Deepavali

  • Deepavali Ganga stanam

    தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சிவபெருமானின் முழு அருளையும் நாம் பெறுவதற்கு கங்கா ஸ்தானம் செய்வது மிகவும் நல்லது.

    வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், சிறிதளவு காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைக்கவும். வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். உடம்பில் தேய்த்து ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

    கங்கா ஸ்நானம் மேற்கொண்ட பிறகு புத்தாடைகள் அணிந்து, பின்பு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சுவாமிகளுக்கு மலர்கள் வைத்து பின்பு நாம் தீபாவளி பண்டிகைக்காக செய்து வைத்த பலகாரங்கள் அனைத்தையும் சுவாமிக்கு படையலாக படைக்க வேண்டும் நாம் செய்து வைத்த மருந்து லேகியத்தையும் படைக்க வேண்டும்.

     

  • Deepavali lakshmi gubera poojai

    தீபாவளி திருநாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும் அதை அவருக்கு அருளிய மகாலட்சுமியையும் பூஜை செய்து வழிபட்டால் இல்லங்களிலும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.  செல்வத்தை பிறருக்கு அருளும் வரத்தையும் தந்தவர் மகாலட்சுமி தாயார் தான். எனவே இந்த பூஜையை குபேர பூஜை என்று சொல்வதை விட மகாலட்சுமி குபேர பூஜை என்று கூறுவதே சிறந்தது.

    லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் :

    தீபாவளி நாளில் செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அம்மாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார். ‘

    பூஜை செய்யும் முறை :

    மகாலட்சுமி தாயார் படம் மற்றும் குபேரர் படம் அல்லது குபேரர் விக்ரகம் இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும். நீங்கள் படத்திற்கு நேரில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது. படம், எந்திரம் வைத்து இருக்கும் இடத்திற்கு இடம் அல்லது வலது புறமாக நீங்கள் அமர வேண்டும்.

    குபேரர் எந்திரம் இருந்தால் அதை வாங்கி வைத்து கொள்ளலாம் இல்லை என்றால் குபேர எந்திரத்தை ஒரு மனை பலகையில் வரைந்து கொள்ளுங்கள். குபேரர் எந்திரத்தில் உள்ள எண்களின் ஓரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நாணயத்தை வைக்க வேண்டும் அந்த நாணயம் எண்களை மறைக்காதவாறு வைத்துக் கொள்ளுங்கள். கட்டத்தின் ஓரத்தில் ஸ்ரீ என்று எழுதி வைக்கவும்.

    குபேர எந்திரத்தின் முன்பு அமர்ந்து தாமரை பூவின் 9 இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இதழிலும் ஒரு நாணயத்தை வைத்து அதில் கொஞ்சம் குங்குமம் வைத்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.ஒவ்வொரு முறை இந்த நாணயத்தை வைக்கும் போதும் இந்த மந்திரத்தை மட்டும் ஜெபித்தாலே போதும்.

     ‘ஓம் குபேராய நமக!!’

     ‘ஓம் தந்தாய நமக!!’

    இந்த நாமத்தை மட்டும் நீங்கள் அந்த ஒன்பது நாணயத்தை வைக்கும் போதும் ஒன்பது முறை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பின்பு அதில் உள்ள இந்த காசுகளை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பணத்தை அடுத்தடுத்த முறை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியாக எடுத்து வைத்து விடுங்கள் மற்ற பணத்துடன் கலந்து செலவழித்து விட வேண்டாம்.

     

  • Deepaval Yama Deepam

    ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.

    தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள்.

    அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

    யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

    சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

    உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

  • October 24 Deepavali Festival

    அக்டோபர் 24 தீபாவளி திருநாள்
    சுபகிருது வருடம் – ஐப்பசி 7
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    தீபாவளி (அதிகாலை 5:00 – 5:30 நீராடலாம்)
    24-அக்-2022 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 06:00 – 07:30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                         
    திதி    :    சதுர்த்தசி         
    திதி நேரம்    :    சதுர்த்தசி    மா    5.39
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    3.33
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

     

  • Deepavali festival celebration

    உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி என்றாலே புத்தாடை அணிவது, இனிப்புக்கள் பகிர்வது, பட்டாசு வெடிப்பது என்பது தான் பலருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால் தீபாவளி கொண்டாடுவதற்கு என்று சில முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல நமக்கும் தெய்வீக சக்திக்கும் இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தும் விரத நாளும் கூட தான்.

    தீபாவளி கொண்டாட்டம் என்பது புத்தாடை வாங்குவதில் இருந்து துவங்குகிறது. ஆனால் புத்தாடை வாங்கும் போது முதலில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும் என்பது தான் முறை. அவரும் நம் வீட்டில் ஒருவர் என்ற நெருக்கத்தை அது ஏற்படுத்தும். நம்மை போலவே தீபாவளியன்று கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவிப்பார்கள். அருகில் உள்ள கோயில்களில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஏற்றது போல் வஸ்திரங்கள் வாங்கி கொடுக்கலாம்.

    நம் வீட்டிற்கு வருபவர்கள், வசதி இல்லாதவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இருப்பவர்கள் என யாருக்காவது நம்மால் முடிந்த அளவிற்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட செய்யலாம். இது போன்று செய்வதால் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு, இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.

    தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அனைவராலும் கங்கையில் போய் நீராட முடியாது என்பதனால் தீபாவளியன்று ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி, மக்களுக்கு ஆசி வழங்குகிறார்கள். அங்கு கங்கா தேவி, வீடுகளில் உள்ள தண்ணீரில் எழுந்தருளுகிறாள். தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள். நல்லெண்ணையில் மகாலட்சுமியும், சீயக்காய் போன்றவற்றில் தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.

    இவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் கையால் நல்லெண்ணைய், சீயக்காய் வைத்து, சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற முறை வைக்கப்பட்டது. இப்படி குளிப்பதால் நம்முடைய பாவங்கள் நீங்கி, கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் நம்மை வந்து சேர்வதுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்ற சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் என்றால் வெறும் பணம், காசும் மட்டும் அல்ல. நல்ல அழகான தோற்றப் பொலிவு, தெளிவு ஆகியவையும் மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

    கங்கை ஸ்நானம் முடிந்த பிறகு புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு போன்ற அனைத்தையும் சுவாமி படத்திற்கு முன் படைத்து, வணங்கிய பிறகு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்று தான் அர்த்தம். அதனால் தீபாவளி நாளன்று வீட்டின் பூஜை அறையில் குறைந்தது 5 அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். சிலரது வீட்டில் ஓம் வடிவம், விளக்கு வடிவம் என கோலமிட்டு அதன் மீது, அதன் மீது விளக்குகளை வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு விளக்குகள் ஏற்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, தீபத்தின் ஒளியில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.

  • NOVEMBER 04 2021 Deepavali

    நவம்பர் 4  தீபாவளி – நீராட நல்ல நேரம் 
    பிலவ வருடம் – ஐப்பசி 18
     அமாவாசை 
    தீபாவளி (அதிகாலை 5.00 – 5.30 நீராடலாம்)
    04-நவ-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    ந.இ    3.51
    நட்சத்திரம்    :    சித்திரை    கா    8.09
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Deepavali oil preparation

    தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

    அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.

    கங்கா ஸ்நானம் :
    தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

    அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும்.

    இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

    ஏன் அதிகாலை ?
    எப்போதும் சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் தீபாவளியன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்னரே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஏன் தெரியுமா?

    பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார்.

    எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார்.

    எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.

    இதோடு நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

  • Deepavali Yama Deepam

    ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.

    தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். 

    அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

    யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

    சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

    உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
    விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
     

  • Deepavali Lakshmi Gubera Poojai

    லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும். குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். "ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை.

    அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்'' என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்…

    ஒருத்தி பெயர் சங்க நிதி, மற்றொருத்தி பெயர் பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச்சங்கு. பதும நிதி, தன் கையில் தாமரை வைத்திருப்பாள்.

    தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே நீங்கள் குபேரனை வழிபடும் போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

    சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
     

  • Deepavali Puranam Koorum Karanagal

    தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

    இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.