Tag: debt relief

  • Worship of Bhairava that grants wealth and prosperity!

    பைரவர், தன்னை நாடுவோருக்கு அருள்புரிபவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்வதால் “பைரவர்” (பயம், பாவம் நீக்குபவர்) என அழைக்கப்படுகிறார். புராணங்களின்படி, இவர் பக்தர்களுக்கு அபயமும் நீண்ட ஆயுளும் அளிக்கிறார்.

    சனி பகவானின் குருவாக விளங்கும் பைரவர், தன்னை வணங்குவோரை சனி தோஷத்தில் இருந்து பாதுகாக்க உத்தரவிட்டார். சனியால் துன்பப்படுவோர், பைரவரை வணங்கினால், சனி பகவான் நன்மைகளையே வழங்குவார் என்பது புராண நம்பிக்கை. எனவே, சனிக்கிழமைகளில் பைரவரை வணங்குவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டகச்சனி போன்ற தோஷங்களை நீக்கும்.

    கால பைரவாஷ்டகம் ஜபிப்பது செய்வினை, நோய், வறுமை போன்றவற்றை அகற்றி செல்வத்தை பெருக்கும். தேய்பிறை அஷ்டமி அன்று 11 தீபங்கள் ஏற்றி வழிபடுவது கடன் பிரச்சனைகளை தீர்க்கும், பயத்தை நீக்கும், எதிரிகளின் தொல்லையை அகற்றும். வில்வம், வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது கடனில் இருந்து விடுதலை தரும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவ வழிபாடு திருமணத் தடைகளை நீக்கி, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை அகற்றும். பைரவர் சன்னிதியில் விளக்கேற்றி, மனதார வணங்கினால், பக்தர்களுக்கு நன்மைகள் கிடைக்கும், வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

  • Simple spiritual remedy to pay off debt: Mango leaf mantra

    கடன் சுமையால் தவிக்கிறவர்களுக்கு எளிய ஆன்மீக பரிகாரம் ஒரு வழிகாட்டியாக அமையும். கடனை அடைக்க சொத்து, நகை விற்பது ஒரு வழியாக இருந்தாலும், எந்த வழியுமின்றி தவிப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த பரிகாரத்துக்கு ஒரு மா இலை, உப்பு தண்ணீர் மட்டுமே தேவை. வீட்டில் கிழக்கு பார்த்து அமர்ந்து, ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து உப்பு தண்ணீர் தயாரிக்கவும்.

    பிறகு, ஒரு மா இலையில் ஸ்கெட்ச் பேனாவால் உங்கள் கடன் தொகையை எழுதுங்கள், உதாரணமாக, “5 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும்” என்று. கருப்பு நிற பேனாவைத் தவிர, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு நிற பேனாக்களை பயன்படுத்தலாம்.இந்த இலையை கையில் பிடித்து, கடன் தீர வேண்டும் என முழு நம்பிக்கையுடன் பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யவும்.

    பின்னர், ஒரு மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கை ஏற்றி, மா இலையை நெருப்பில் பொசுக்கி, அதன் சாம்பலை உப்பு தண்ணீரில் கரைத்து, கால் படாத மண் பாங்கான இடத்தில் கொட்டவும். இந்த பரிகாரத்தை தினமும் அல்லது ஞாயிறு காலையில் செய்யலாம். 48 நாட்களில் கடன் தீர ஒரு வழி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் உறுதியளிக்கின்றனர்.