Tag: car fest video

  • Padmavathi Thayar car fest video

    திருச்சானூர் பிரமோற்சவத்தின் 8வது நாளில் அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை மாத பிரமோற்சவம் கடந்த 23 ம் தேதி யானை உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை மகா ரத உற்சவம் நடந்தது. மகா ரதத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்குமாட வீதியில் தாயார் பவனி வந்தார். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர்.