Tag: cancel

  • June 21 thirupathy dharshan cancel

    சூரிய கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 

    ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.  இதனால் ஏழுமலையான்  கோயிலில் 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட உள்ளது. 

    ஜூன் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு  மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர். 

    இரவு  8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே ஜூன் 21 அன்று ஏழுமலையான்  கோயிலை பக்தர்களுக்கு அன்றைய தினம் முழவதும் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கோயிலில் பக்தர்களை  கல்யாண உற்சவ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிரகணத்தின் போது  தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற எந்தப் இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கபடாது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathyil Adhar Dharshan cancel

    திருப்பதியில் ஆதார் அட்டை மூலம் வழங்கப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதை தவிர்க்க, ‘சர்வ தரிசனம் டிக்கெட்’ என்ற பெயரில் ஆதார் அட்டை மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தேவஸ்தானம் தொடங்கியது.

    முதலில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை தினமும் வழங்கும் திட்டம் தொடங்கியது. இந்த டிக்கெட்கள் திருப்பதி பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் எதிரில் உள்ள  விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. திருமலையில் 8 கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த டிக்கெட்டுக்கு பக்தர்களிடம் இருந்து படிப்படியாக ஆதரவு குறைவதாக கூறி டிக்கெட் எண்ணிக்கையை தேவஸ்தானம் குறைத்தது. இருப்பினும், இந்த டிக்கெட்களை பெற மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை எனக்கூறி, திருமலையில் வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.