Tag: Arudhra Darshan Utsavam

  • Chidambaram Nataraja Temple: Arudhra Darshan Utsavam Commences

    டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்  கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். 

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனையத்து நாளை ஞாயிற்றுக்கிழமை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6 ஆம் தேதி அன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7 ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது.

     விழாவின் முக்கிய நிகழ்வான  தேர்த்திருவிழா 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15 ஆம் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழுவினர் செய்து வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.