Tag: Anjaneyar koil

  • Anjaneyar koil kumbabishegam

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மதுரை அனுப்பானடி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    மிகவும் புகழ்பெற்ற மற்றும் புராதன மிக்க இத்திருக் கோவிலில் திருப்பணிகள் மற்றும் மராமத்து பணிகள் நிறைவு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த வாரம் மகா கணபதி உள்ளிட்ட யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

    இதன் முக்கிய வைபவமாக இன்று மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உயர்நீதி மன்ற நீதியரசர் திருமதி.விமலா முன்னிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், பல்வேறு பிரமுகர்கள் பலர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோசம் முழங்க யாகசாலை கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு வைதிக முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட 5000 மேற்பட்டபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
     

  • Namakkal Anjaneyar koil Booking

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு செய்ய கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும், ஆஞ்சநேயரை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

    தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.

    வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு, நவம்பர் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரர்கள் மூலமாகவே நடைபெறும்.

    இது குறித்து கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ் கூறியதாவது:

    ஒவ்வோர் ஆண்டும், அடுத்த ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும்.

    சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொர்ணாபிஷேகத்திற்கு பின் ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 பேர் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்குப்பின் 5 பேர் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்படும். முழுத்தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும்.

    ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிர்த்து, பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

  • Dharapurm Anjaneyar koil car festival

    தாராபுரத்தில் 700 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் . 700 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த இன்றைய தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார், இதில் 89 ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர். 

      பொதுவாக சீதாராமர் திருக்கோவில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம், ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் தனி சிறப்பு. 

    அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே, இக் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சார்த்தி ஆஞ்சநேயப் பெருமானே உள்ளம் உருக வேண்டிக் கொண்டாள் திருமணத்தடை உள்ளவர்களுக்கு சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பதும், கல்வி கேள்விகளில் அவர்கள் சிறந்து சிறந்து விளங்குவார்கள் என்பதும், தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது சுபிட்சம் அடையும் என்பதும் தனிச்சிறப்பு.
     
    வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வருடாந்திர தேர்வடம் பிடிப்பு நிகழ்ச்சி கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது ஆஞ்சநேய சுவாமிகளுடன் உற்சவ மூர்த்திகளான சீதாராமர் சிலைகள் பக்தர்கள் புடைசூழ திருத்தேருக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் நிறுத்தப்பட்டது தொடர்ந்து நாளை காலை ஏழு மணிக்கு திருத்தேர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் நிலையை அடையும்
       
    புகழ்பெற்ற தாராபுரம் ஸ்ரீ காடு ஹனுமந்தராய திருக்கோவிலில் நடைபெற்ற தேர்வடம் பிடித்து நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.