Tag: abishegam

  • Special Abhishekam to Great Lord Nandi in Arunachaleswarar Temple!

    அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.

  • Kanchipuram Kachabeswarar Temple Maha Kumbabishekam!

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்! 

    காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Annual Abhishekam in Ayyanar Temple!

    பரமக்குடி அருகே ராதாப்புலி தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் வருடாபிஷேகம்!

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ராதாப்புலி ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோவில் 16 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

  • kadan theera abishegam

    பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

    முக்தி கிடைக்க:
    இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.

    தீர்க்காயுசுடன் வாழ:
    சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.

    குடும்ப ஒற்றுமை நீடிக்க:
    குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

    நல்வாழ்க்கை அமைய:
    நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது

    கடன் தீர:
    மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.

    நினைக்கும் காரியம் நிறைவேற:
    சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.

    பிணிகள் தீர:
    கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.

    குழந்தை பாக்யம் பெற:
    நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.

    பயம் போக்க:
    மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    இனிய குரல் வளம் கிடைக்க:
    இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.

    செல்வம் சேர:
    பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.

    பாவங்கள் கரைய:
    பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.

  • Pradhosham abishegam

    பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 

    தயிர் – பல வளமும் உண்டாகும், 

    தேன் – இனிய சாரீரம் கிடைக்கும். 

    பழங்கள் – விளைச்சல் பெருகும், 

    பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும், 

    நெய் – முக்தி பேறு கிட்டும். 

    இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும். 

    சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும். 

    எண்ணெய் – சுகவாழ்வு, 

    சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம், 

    மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும். 

    பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். 
     

  • 108 Kilo Kunguma abishegam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 108 கிலோ குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மஹிஷாசுர மர்த்தினி சிறப்பு :

    மஹிஷாசுரமர்த்தினிக்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பங்கேற்று வழிபடுவதால் அசுர குணம் அழியும், தடைகள் நீங்கும், வியாதிகள் குணமாகும், பாவங்கள் விலகும், பயம் அகலும், சர்வ துக்கங்களும் விலகும். துர்க்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான பெயர்களால் போற்றப்படுகிறாள். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், மஹிஷனை வதம் செய்யும் கோலத்தில், 9 அடி உயரத்தில், 1008 பெண்கள் மஞ்சள் நீரினால் மஹா அபிஷேகம் செய்து, பல கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வப்பொழுது சூலினி துர்கா ஹோமம், மஞ்சள் குங்கும அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சூலினி துர்கா ஹோமத்துடன் 108 கிலோ குங்குமத்தினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    குங்குமாபிஷேகத்தின் சிறப்பு :

    குங்குமம் ஆரோக்கியமான அனைத்து செயல்களையும் தோற்றுவிக்கும் அற்புத பொருள் ஆகும். குங்குமம் அனைவரையும் வசீகரிக்க செய்து, தெய்வீகத்தன்மையுடன் சுபதன்மை ஏற்படுத்தும். மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் கொண்டு  அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்வதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். தீய சக்திகள் விலகும், ரத்த சம்பந்தமான உள்ள நோய்கள் விலகும். கிருமி நாசினியான குங்குமம் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தடுத்து மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருகிறது.

    நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி, சக்தி குவியும் இடம். சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்ட வைக்கும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில் தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்பட காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதை தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஹோமம், அபிஷேகத்தின் பலன் :

    இப்பூஜையின் மூலம் கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கான ஆதாரம்.

    சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203