ஜூலை 28 ஆடி அமாவாசை
சுபகிருது வருடம் – ஆடி 12
அமாவாசை
ஆடி அமாவாசை, சதுரகிரி கோயில் விழா
28-ஜூலை-2022 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை இ 11.58
நட்சத்திரம் : புனர்பூசம் கா 8.25
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Tag: Aadi Amavasai
-
July 28 2022 Aadi amavasai
-
July 20 Aadi Amavasai
ஜூலை 20 – ஆடி அமாவாசை
சார்வரி வருடம் – ஆடி 5
அமாவாசை அமாவாசை
ஆடி அமாவாசை, சதுரகிரி கோயில் விழா
20-ஜூலை-2020 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை இ 11.36
நட்சத்திரம் : புனர்பூசம் இ 10.20
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
July 31 Aadi Amavasai
ஜூலை 31 – ஆடி அமாவாசை
விகாரி வருடம் – ஆடி 15
அமாவாசை
ஆடி அமாவாசை,
சதுரகிரி கோயில் விழா,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கருட சேவை.
31-ஜூலை-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : அமாவாசை
திதி நேரம் : சதுர்த்தசி கா 11.24
நட்சத்திரம் : புனர்பூசம் ம 2.53
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Aadi Amavasai
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை மூதாதையர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்கள் அணிந்து கொள்ளலாம்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். மேலும் ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-
Sadhuragiri Aadi Amavasai Festival
மதுரை அருகிலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி ஆமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை விழா சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் கடந்த 27-ந் தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 1-ந் தேதி வரை கோவிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின் வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.