Tag: 70வது

  • 70 feet height vinayakar

    ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத்தில்  70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை நடைபெற்றது. ஹைதராபாத்தில்  ஷோபா யாத்திரை என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலைகளை உசேன் சாகர் ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வரைக்கும் கணேஷ் நிமஞ்ஜனம் நடைபெற்றது.

    ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பிரம்மாண்டமான உயரம் முதல் சிறிய உயரம் வரை அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளின் ஷோபா யாத்திரை நடைபெறுகிறது.

    ஷோபா யாத்திரையின் ஒரு பகுதியாகபகுதியாக ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சப்த முக கணபதி சிலையை சூப்பர் கிரேன் மூலம் தூக்கி பெரிய லாரியில் நிலைநிறுத்தினார்கள்.தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சப்தமுக கணபதி உசேன் சாகர் ஏரியை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஹைதராபாத்தில் உள்ள பாலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற விநாயகர் சிலைகளும் தற்போது சோபா யாத்திரையாக உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.

  • thirupathy-sami-dharshan

    தீபாவளி பண்டிகை நாளில், திருப்பதியில் உள்ள ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல இந்தாண்டு தீபாவளி அன்றும், திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    தீபாவளி நாளில், திருப்பதியில் 70,713 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் ரூ. 3.13 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலவசம் தரிசனத்திற்கான வரிசையில், வைகுண்டம் காம்பிளக்ஸ் வரை, சுமார் 12 மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளன.

    மேலும், திருமலைப்பாதை வழியாக நடந்தே சென்று திவ்ய தரிசன்ம் பெற்ற பக்தர்கள், 11 மணி நேரமும், ரூ.300 கட்டணம் செலுத்து டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அதன்படி, தீபாவளி நாளான நேற்று மட்டும் சுமார் 70,713 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான வழிப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம், நேற்று ஒரேநாளில் ரூ. 3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • varadaraja-temple-thirthavari

    நெல்லையில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடந்தது.
    மிகவும் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்து வந்தது.
    10-ம் நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீர்த்தவாரி கட்டிடத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    வரதராஜ பெருமாள் கோவிலின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த மண்டபம் சரியாக பராமரிக்கப்படாததால் நீண்ட காலமாக தீர்த்தவாரி நடைபெறாமல் இருந்தது.
    70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. இரவு வெள்ளி பல்லக்கில் பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • 70

    காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார் என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் முக்தியடைந்தார். இந்த மாதம் 1-ந்தேதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். முக்தியடைந்த ஜெயேந்திரரின் முதலாவது ஆராதனை வருகிற 13-ந்தேதி காஞ்சி சங்கரமடத்தில் வைதீக முறைப்படி நடைபெறும். இது தவிர நாடு முழுவதும் உள்ள மடத்தின் கிளைகளில் ஜெயேந்திரரின் படங்கள் வைக்கப்பட்டு தினமும் நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.