Tag: 4-ஆவது

  • Atthi Varadhar Dharisanam

    காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும். அத்திவரதரை 43 நாட்களில் இதுவரை 85 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலிருந்தே, அத்தி வரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

    அத்திவரதர் புகழ் பரவப் பரவ, அத்தி வரதர் தரிசனத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்து மட்டுமல்ல, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் குவியத் தொடங்கினர்.  அத்தி வரதர் தரிசனம் தொடங்கி 42 நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் 4 நாட்களே அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதாலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதாலும் அத்தி வரதரைக் காண முன்பை விட இரு மடங்கு பக்தர்கள் குவிகிறார்கள். இதுவரை 85 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே அத்தி வரதர் வைபவம் 108 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி அத்தி வரதரை வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவ்த்துள்ளார்.
     

  • August 4 Naga Chadurthi

    ஆகஸ்ட் 4 – நாக சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆடி 19
    ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
    04-ஆக-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    11.49
    நட்சத்திரம்    :    பூரம்    கா    8.50
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Aadi Amavasai Pithru Tharpanam

    ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை,இதனை முன்னீட்டு நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் இன்று பல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி,தங்கள் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்தனர் .இதனிடையே,  ஆடி அமாவாசையை முன்னீட்டு இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் அருவி கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர். பாபநாசம் தாமிரபரணி நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துஏராளமானோர் வழிபட்டனர். 

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்  கடற்கரையில்  ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர்  கடலில்  நீராடி   தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டுள்ளனர். 

    ஆடி அமாவாசையை முன்னிட்டு  புண்ணிய ஸ்தலங்களின் ஒன்றான திருவையாறு காவிரிக்கரையில் பல்லாயிரக்கானோர் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் உள்ள சுரபி ஆற்றங்கரையில் புனித நீராடி தங்கள் மூதாதையர்களுக்கு பித்ரு கர்மா மற்றும் தர்ப்பணம் செய்து பல ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமத்தில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடைபெற்றது. 
     

  • Muruga perumanukku Ugandha Aadi Kiruthigai

    முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது. 

    எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.  அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.

    இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

    நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
     

  • July 4 vivekanandhar ninaivu naal

    ஜூலை 4 – விவேகானந்தர் நினைவு நாள்
    விகாரி வருடம் – ஆனி 19
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    விவேகானந்தர் நினைவு நாள்
    04-ஜூலை-2019 வியாழன்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    இ    9.37
    நட்சத்திரம்    :    புனர்பூசம்    கா    6.46
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • June 4 Vasthu Naal

    ஜூன் 4 – வாஸ்து நாள்
    விகாரி வருடம் – வைகாசி 21
    04-ஜூன்-2019 செவ்வாய்  
    வாஸ்து நாள்(காலை 9.58 – 10.34)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    ம    3.10
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    இ    12.35
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • May 4 Agni Natchathiram

    மே 4 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    விகாரி வருடம் – சித்திரை 21
     அமாவாசை 
    அக்னி நட்சத்திரம் இரவு 02:15 ஆரம்பம்
    04-மே-2019 சனி  ஷாபான்28
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    அ.கா    5.07
    நட்சத்திரம்    :    அசுவினி    மா    4.24
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • gurupeyarchi-vizha

    மங்களகரமான விளம்பி வருடம் 04.10.2018 வியாழக்கிழமை அன்று, அதாவது புரட்டாசி மாதமான இந்த மாதத்தில் வரும் 18-ம் நாளான, தசமியில் சனிபகவான் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், சரியாக 10.07-க்கு, துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார்.

    துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு அதாவது, விசாகம் 4-ம் பாதத்தில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

    குரு பெயர்ச்சி விழா தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான திட்டை வசிஷ்டேஸ் வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 4-ந்தேதி நடக்கிறது.

    தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குகிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

    இந்த கோவிலில் குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், பார்க்கும் இடங்களை சுபம் பெற செய்வார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். அடுத்தமாதம் 10-ந் தேதி லட்சார்ச்சனையும், 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பரிகார ஹோமமும் நடக்கிறது.

  • arunaachaleswarar-kovilil-varum-4-am-thedhi-aadipooravizhaa

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் விழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையும், மாலையும் விநாயகர் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இந்த விழாவானது கொடியேற்றத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் என 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 13-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவு பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு 13-ந் தேதி இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

  • 4

    திருமலையில் உள்ள கல்யாண கட்டாவில் புதிதாக கட்டப்பட்ட 4-ஆவது தளத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திறந்து வைத்தார்.

    ஏழுமலையானுக்கு முடிகாணிக்கைச் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் முடிகாணிக்கைச் செலுத்தும் மையத்தை (கல்யாண கட்டா) ஏற்படுத்தியது. இங்கு பக்தர்கள் இலவசமாக தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கைச் செலுத்தி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் சமயத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதுவரை 3 தளங்களை மட்டுமே கொண்ட இந்த மையத்தில் தேவஸ்தானம் புதிதாக ரூ. 34 லட்சம் செலவில் 4-ஆவது தளத்தை கட்டி உள்ளது.