ஜூன் 3 – அமாவாசை
விகாரி வருடம் – வைகாசி 20
03-ஜூன்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அமாவாசை
திதி நேரம் : அமாவாசை மா 4.19
நட்சத்திரம் : ரோகிணி இ 1.08
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Tag: 3ஆம்
-
June 3 Amavasai
-
May 3 Sri Rangam Car Festival
மே 3 – ஸ்ரீரங்கம் தேர்
விகாரி வருடம் – சித்திரை 20
03-மே-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 4.45
நட்சத்திரம் : ரேவதி ம 3.08
யோகம் : அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
senniyamman-kovil-august-3-m-thedhi-aadiperukku-vizha
செங்கம் அருகே நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நேற்று (29-07-18) நடைபெற்றது.செங்கத்தை அடுத்த நீப்பத்துறையில் அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரச்சன வெங்கட்ரமண பெருமாள் சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 73ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இந்த நிகழ்சியைத் தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து, தினமும் இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து வருகின்ற ஆகஸ்டு 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெறும், பின்னர், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடுவர். விழாவையொட்டி, சேலம், தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாலை, செங்கம் ஆகிய பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து, பொங்கல் வைத்து அங்குள்ள சென்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.
-
3
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. கார்த்திகை தீபம் திருவிழா அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவர் வெங்கடாஜலபதி சன்னதி, வகுளமாதா தேவி சன்னதி, வரதராஜசாமி சன்னதி, லட்சுமிநரசிம்மசுவாமி சன்னதி, தங்கக்கொடி மரம், பலி பீடம் ஆகிய பகுதிகளிலும், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில், புஷ்கரணியின் நடுவே, நான்கு மாடவீதிகள், லட்டு கவுண்ட்டர்கள், நாத நீராஞ்ஜன மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தீபம் ஏற்றப்படுகிறது. அந்த நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் சுமார் 3 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்று நடக்கும் வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடக்கும் கருடசேவை உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.