Tag: 25

  • April 25 – Indraya Naal Eppadi

    ஏப்ரல் 25 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – சித்திரை 12
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்
    25-ஏப்ரல்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    3.57
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    11.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Indraya naal eppadi

    மார்ச் 25 – இன்றைய நாள் எப்படி 
    விளம்பி வருடம் – பங்குனி 11
    25-மார்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    1.17
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    11.44
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • 25

    சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 25 ஆம் தேதி நடக்கிறது.
    கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில் 90-வது ஆண்டு கந்த சஷ்டி கோடி அர்ச்சனை பெருவிழா அக்டோபர் 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த நாட்களில் மூலவர், உற்சவர், தண்டாயுதபாணி, ஆறுமுகர் ஆகிய 4 சன்னதிகளில் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் முத்துக்குமரன் கலையரங்கில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 25-ந்தேதி சஷ்டி நாளில் சிறப்பு பூஜைகளும், கோடி அர்ச்சனையும் காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பிரத்யேக புஷ்ப அலங்காரத்துடன் முத்துக்குமாரன் பவனி வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் விழா நடக்கிறது. 26-ந்தேதி காலை 10.15 மணி அளவில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சாக மூர்த்தி முத்துக்குமாரசாமிக்கு 108 பன்னீர் அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இரவு 8 மணிக்கு மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடக்கிறது.

  • sabari-malai

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 25-ந்தேதி கொடிமரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதிய கொடி மரம் சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கொடி மரத்திற்கு விசே‌ஷ பூஜைகள் நடக்கின்றன. பிரசாத சுத்திகரிப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. வருகிற 22-ந்தேதி சகஸ்கர கலச பூஜை, ஜல பூஜை, 23-ந்தேதி கலச பூஜை, 24-ந்தேதி களபாபிஷேகம் போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து 25-ந்தேதி காலை 11.50 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேளையில் கொடி மரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது.

  • 25

    மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று வருகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் மார்ச் 25 ஆம் தேதி அன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.