Tag: 24

  • december-24-rasi-palan

    டிசம்பர் 24
    விளம்பி வருடம் – மார்கழி 9
    24-டிச-2018 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 8.18
    நட்சத்திரம் : புனர்பூசம் இ 9.50
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பாசம்
    மிதுனம் – நட்பு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – அன்பு
    கன்னி – சுகம்
    துலாம் – பொறுமை
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – லாபம்
    மகரம் – உயர்வு
    கும்பம் – அமைதி
    மீனம் – புகழ்

  • nellaiappar-koil-ippasi-thiruvizha

    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, காந்திமதி அம்பாள் சன்னதியில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறும்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் நவம்பர் 2-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசிய சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை பிரதானச் சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறது.

    3-ந் தேதி முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.

    4-ந் தேதி அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் திருக்கல்யாண வைபவ விழா, காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வருதல் ஆகியவை நடைபெறும்.

    4,5,6-ம் தேதிகளில் அம்பாள் சன்னதியில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா, 7-ம் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேச வீதி உலா ஆகியவை நடைபெறும்.

    இவ்வாறு நெல்லை யப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரி பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tirupathiyil-24-mani-neram-darisanam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மட்டும் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் கூட்டம் அலைமோதியது. புரட்டாயில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

    இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதை புண்ணியமாகவே கருதுகின்றனர். நேற்று இரண்டாவது சனிக்கிழமை விசேஷம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வார விடுமுறை, செவ்வாய்க்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருப்பதி நோக்கி படையெடுத்தனர். இதன் விளைவு 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பின. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை கருத்தில் கொண்டு விஐபி தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வசூல் ரூ. 2.46 கோடி ஆகும். கூட்ட நெரிசலால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டது.

  • thirupaty-free-dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடை மற்றும் வாரவிடுமுறையையொட்டி, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தவிர்க்க, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து நேர ஓதுக்கீட்டிற்கான டிக்கெட் பெற்றால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 300 ரூபாய் கட்டணம் செலுத்திய பக்தர்களும், பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மூன்று மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24

    முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழநி தண்டாயுதபாணி சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 24ம் தேதி காலை 11 – 12 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்றிரவு 7 – 8.30 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.

  • 24

    வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் திருப்பதி திருமலை மலைப்பாதை திறந்தே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் பக்தர்களுக்காக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா அன்று அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறந்ததும் அதிகாலை 5.30 மணியளவில் முதலில் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் காலை 8 மணியளவில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர். பக்தர்கள் வரிசையில் செல்ல, திருமலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசைகள் மற்றும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க கொட்டகைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28-ந்தேதியில் இருந்து ஜனவரி 1-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த 5 நாட்களும் 24 மணி நேரமும் திருப்பதி-திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • pakthargal-kurai-thirkkum-24-thirththangal

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

    1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.
    2. தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
    3. வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
    4. லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
    5. சித்தர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
    6. திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
    7. காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
    8. சாவித்ரி தீர்த்தம் – இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
    9. சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
    10. அயிராவத தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
    11. வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
    12. துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
    13. ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
    14. சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
    15. தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
    16. முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
    17. தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
    18. பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
    19. கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
    20. கங்கா தீர்த்தம் – இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
    21. சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.
    22. கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
    23. மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
    24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

    கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது. இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.

  • 24

    ராசிபுரம் மாரியம்மன் கோயிலி ஐப்பசி திருத்தேர் திருவிழா அக்டோபர் 24-இல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ராசிபுரம் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர் கோயில்களின் ஆண்டு திருவிழா வழக்கமாக ஐப்பசி மாதம் துவங்கி 20 நாள்களுக்கு நடைபெறும். நிகழ் ஆண்டுக்கான விழா பூச்சாட்டுதலுடன் வரும் 24-இல் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சமூகத்தினரின் கட்டளையாக சுவாமி திருவீதி உலா அழைத்து வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக அக்.26-இல் கம்பம் நடுதல், நவம்பர் 6-இல் பூவோடு எடுத்தல், 7-ல் கொடியேற்று விழா, 8-ல் அம்மை அழைத்து பொங்கல் வைத்தல், 9-இல் தீக்குண்டம் இறங்குதல், மாலை திருத்தேரோட்டமும் நடைபெறும். 10-ஆம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கை, 11-ஆம் தேதி சுவாமி பவனி அழைத்து வருதல், 11-ஆம் தேதி சப்தாவர்ணம் நடைபெறும்.

  • 24

    திருமலைக்கு செல்ல திருப்பதி மலைப்பாதை இன்று முதல் 12-ந் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 3-ந் தேதி தொடங்க உள்ளது. அதற்காக திருமலையில் உள்ள மாட வீதிகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகளில் வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
    திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் மலைபாதையில் நடந்து வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அக்டோபர் 1 முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.