Tag: 12

  • June 12 – Indraya Naal Eppadi

    ஜூன் 12 – இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – வைகாசி 29
    12-ஜூன்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    7.51
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    1.24
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • May 12 Mothers Day

    மே 12 – அன்னையர் தினம்
    விகாரி வருடம் – சித்திரை 29
    அன்னையர் தினம்
    12-மே-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    மா    4.49
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    கா    11.15
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

  • naalai-thirupathi-sannithaanam-12-mani-neram-moodapadavullathu

    நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதி  12 மணி நேரம் மூடப்படவுள்ளது. நாளை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. பொதுவாக கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி நாளை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

  • naalai-thirupathi-sannithaanam-12-mani-neram-moodapadavullathu

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதி  12 மணி நேரம் மூடப்படவுள்ளது. வெள்ளி கிழமை இரவு 11.54 மணி முதல் சனிக்கிழமை காலை 3.49 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.

    பொதுவாக கிரகண காலங்களில் 6 மணி நேரத்துக்கு முன் ஏழுமலையான் கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 4.15 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்பட உள்ளது.

    கிரகணம் முடிந்த பின் கோவில் திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்டவை செய்து, காலை 7 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளையும், பவுர்ணமி அன்று இரவு நடைபெறும் கருட சேவையையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

  • thirupathy-koil-nadai

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ந் தேதியன்று, திருப்பதி கோவில் நடை 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன் 27-ந் தேதி இரவு 11.54 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது. வழக்கமாக கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன் திருப்பதி கோவில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி 27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி கோவில் நடை சாத்தப்பட உள்ளது. 28 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி 27 ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 27-ந் தேதி இரவு பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 28-ந் தேதி அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கொலு, பஞ்சாஞ்கம் படித்தல் உள்ளிட்டவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

  • 12

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைகள் முடிவடைந்து கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், கோவிலின் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றாலும், பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் (13-ந் தேதி) காலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 17-ந் தேதி வரை தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜையும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • 12-racikarargal-vazhipada-vendiya-vinayagar

     

    அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ.. 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

    மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

    ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

    மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

    கடகம் : பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

    சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

    கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

    துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

    விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

    தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

    மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

    கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

    மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

     

  • guru-peyartchi-217-rasi-palan-for-all-12-zodiac

    ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள்  ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில  பாவ கிரகங்களாகவும் உள்ளன.

    ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.

    இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய,  விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் இடம்பெயர்ந்துள்ளார். 

    இந்த குரு பெயர்ச்சியால் குருபகவான் 12 ராசிகாரர்களுக்கு யாருக்கு நல்ல பலன்களை தருகிறார். யார் யார் பரிகாரம் செய்ய வேண்டும் குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம்  உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம். 
    இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசி காரர்களுக்கு யோகம் தரக்கூடியது. காரணம் குருபகவானின் பார்வை இம்முறை இந்த மூன்று ராசிகளின் மீது படுகிறது. 

    தனுசு, கன்னி, மத்திம பலன்களை அடைகின்றனர். கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்திலும், தனுசு ராசிக்கு 11ஆம் இடத்திலும் குருபகவான் அமர்கிறார். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பரிகாரம் செய்தால் பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

     

    மேஷம் – யோகம்

    குரு பகவான் துலாம் ராசியில் அமர்ந்துள்ளார்.  அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குரு பகவால் அல்லல்பட்ட மேஷ ராசிகாரர்களுக்கு இனி  நல்ல காலம் பிறக்கிறது. 2018 அக்டோபர் 3 வரை பலன்கள் அருள்கிறார் குருபகவான். 

    மேஷம் 7வது ஸ்தானம். குரு பகவான் 7ஆம் இடத்தில்  அமர்ந்துள்ளார். குரு பகவான் ராசிக்கு  2, 5, 7, 9,11ல் அமரும் போது நல்லது நடக்கும். 

    கணவன்மனைவி உறவு நல்லது நடக்கும். விட்டுக்கொடுப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். பகை விலகும். நட்புகள் மலரும். உங்களின் ராசிக்கு 3வது ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். இளைய சகோதரர்கள் உறவு அதிகரிக்கும். 

    9,12 ஆதிபத்தியம் வெளிநாட்டு பயணம் கைகூடும். இது அற்புதமான குரு பெயர்ச்சி.11வது ஸ்தானத்தை பார்க்கிறார் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். . எண்ணங்கள் பலிக்கும் என்ன நினைத்தாலும் பலிக்கும். மூத்த சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

    7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.  அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் கட்டுப்படும். ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும்.

     

    ரிஷபம் – உடல்நலனில் அக்கறை 

    துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். இந்த இடத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால்  கடன் வாங்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். 

    ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு 10வது ஸ்தானத்தை பார்க்கிறார் வேலையில் இதமான சூழ்நிலை கிடைக்கும். பார்க்கும் இடம் நன்மை ஏனேனில் கர்ம ஸ்தானத்தை பார்வையிடுகிறார். 

    12 இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் மனைவு ஒற்றுமை அதிகரிக்கும். தனகாரகன் தன ஸ்தானத்தை பார்க்கிறார். வரவை தாண்டி செலவு அதிகரிக்கும். சுப செலவாக மாற்றலாம். 

    வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடையை அணியலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். 

    மிதுனம் – பொற்காலம்

    குரு பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானம். ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். 11வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். இது அற்புதமான குரு பெயர்ச்சி. பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். தோற்றப்பொலிவு அதிகரிக்கும்.

    எண்ணங்கள் நிறைவேறும். மிதுனராசிக்காரர்கள் ஏற்றம் பெறுவார்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.  உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். 

    கடகம்  – அல்லல் விலகும் 

    கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் அல்லல் விலகும். 

    ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். 12 இடமான அயன சயன இடத்தை பார்க்கிறார். 

    அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் தடைகள் விலகும். கண்டங்கள் விலகி உடல் ஆரோக்கியம் ஏற்படும். 

    குருவின் 7ஆம் பார்வை கர்ம ஸ்தானமான 10வது இடத்தின் மீது விழுவதால் நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். அங்கீகாரம் கிடைக்கும். 

    12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவை அறிந்து செலவு செய்யவும். சுப விரையமாக செய்யவும். குரு பெயர்ச்சி நன்மையை அள்ளி வழங்கும். 

    சிம்மம்  – ஆன்மீக பயணம்

    குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்கள் மீது அக்கறை தேவை. 

    குரு பகவான் உங்களுக்கு 7வது இடத்தை 5ஆம் பார்வையாக பார்க்கிறார். 9வது இடத்தை 7ஆம் பார்வையாக பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தை பார்த்தால் தந்தையின் உடல் நலம் உண்டாகும். 

    11வது இடத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் அல்லல்கள் விலகும். வாழ்க்கை துணைக்கு மகிழ்ச்சி. 
    9ஆம்  பார்வை பார்ப்பதால் நீண்ட தூர பயணம் உண்டாகும். தர்ம ஸ்தானத்தை பார்ப்பதால் தான தர்மத்திற்கு செலவு. ஆன்மீக பயணம் உண்டாகும். தன லாபத்தை தரும். வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம்.

    கன்னி – தன லாபம்

    குரு பகவான் கடந்த ஓராண்டாக ஜென்மத்தில் இருந்தார். இப்போது  2வது இடத்திற்கு செல்கிறார். இன்னல்கள் விலகும். தன வரவை அள்ளி வழங்கும். நல்ல குரு பெயர்ச்சி. 2வது இடத்தில் வாக்கு வன்மை பெருகும்.  

    ராசிக்கு 6வது இடம், களத்திர ஸ்தானத்திற்கு மறைவு. கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும். 
    7ஆம் இடத்திற்கு 12வது இடத்தை குரு பார்க்கிறார். குடும்ப ரகசியம் காக்க வேண்டும். 

    8வது இடம் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். நோய் நொடிகள் விலகும். 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும். 

    துலாம்  – ஜென்ம குரு 

    துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும்.  வேலை பளு அதிகரிக்கும். 

    உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும்.வெற்றி கிடைக்கும். பஞ்ச ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும். 

    7வது இடத்தை பார்ப்பதால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும், திருமணம் கைகூடும். வெளிநாடு சுற்றுலா செல்லலாம். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

    9வது இடத்தை பார்ப்பதால் தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் வீட்டில் குரு அமர்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சகோதர உறவு சிறப்பாக இருக்கும். 

    விருச்சிகம் – தடைகள் விலகும்

    லாபஸ்தானத்தில் இருந்து குரு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வந்துள்ளார். குருவின் பார்வை  4வது இடம், 6வது இடம் 8ஆம் இடத்தின் மீது படுகிறது. தடைகள் விலகும். நிறைய செலவுகள் ஏற்படும். விரையங்களை சுப விரையமாக மாற்றலாம்.

    வீடு வாங்குகள், கடன் வாங்குகள். கடன் சேமிப்பு 4வது பார்வையாக கும்பத்தை பார்க்கிறார்.  மூட்டுவலி விலகும்.  நெருக்கடிகள் விலகும். 

    நல்ல வீடு வாங்கலாம். மேற்படிப்பு படிக்கலாம். 6வது இடத்தை பார்ப்பதால் எதிரிகள் விலகுவார்கள். 8வது இடத்தை பார்வை படுவதால் நன்மைகள் உண்டாகும். கணவரின் வருமானம் அதிகரிக்கும். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

    தனுசு – லாப ஸ்தானம் 

    தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.  ஏழரை சனி நடந்தாலும் நன்மையே கிடக்கும்.

    குரு பகவான் 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அதைப்போலவே பஞ்சம ஸ்தானத்தை பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.  

    குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 7வது இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது. 

    மகரம் – தடைகள் விலகும்

    குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம், வாக்குஸ்தானம். 4வது இடம், 6வது இடம் பார்வை படுகிறது. தனச்செழிப்பை அள்ளி வழங்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

    4வது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் உயர் கல்வி கற்பதில் இருந்த தடைகள் விலகும். பட்டம் பெற்று சிறப்படைவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டு 6வது இடத்தை குருபகவான் பார்ப்பதால் நோய்கள் விலகும். 

    கும்பம் – யோகம் 

    அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பெயர்ச்சி மாபெரும் வரவாக அமைந்துள்ளது. 

    சோர்வு நீங்கி மகிழ்ச்சி தென்படும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையானவை கிடைக்கும். தனச்செழிப்பு மனத்தெளிவை தரும். 

    நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார். 

    மூன்றாமிடத்தை 7ஆம் பார்வையாக பார்ப்பதால் இளைய சகோதரர்களுடன் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தினர் உறவு மேம்படும். தொடர்புகள் அதிகரிக்கும். மிகப்பெரிய பாராட்டு கிடைக்கும். 

    பூர்வபுண்ணிய ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். உலகம் பாராட்டும் வகையில் வெற்றி கிடைக்கும் யோக காலமாகும். 

    மீனம் – வெற்றி

    மீன ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 

    2வது இடமான தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தன வரவு ஏற்படும். ஆனால் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும். 

    4வது இடத்தை குரு பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். 

    வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

     

    – குருபரன்

  • mantras

     

    ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் மூலம் நிவர்த்திகள் செய்துக்கொள்ளலாம். ஆனால் எந்த ராசிகாரர்கள்  எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம். இந்தப் பதிவின் மூலம் அந்தந்த ராசிகளுக்கான தெய்வங்களும், அவர்களுக்கான சுலோகங்களையும் பார்ப்போம்.

    ‪‎மேஷம் :

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்கான  சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூற துன்பங்கள் நீங்கும்

     

    ஷண்முகம் பார்வதீ புத்ரம்

    க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்

    தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்

    வந்தே ஸிவாத் மஜம்

     

    ரிஷபம் :

     ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும் கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

     

    ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை

    ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

     

    மிதுனம் :

     மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     

    ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

     

    கடகம் :

    கடக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு  பவுர்ணமிக்கும்  அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

     

    சிம்மம் :

     

     சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

     

    கன்னி :

     

    கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

    ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

    ‪‎

    துலாம் :

     

    துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

     

    விருச்சிகம் :

     

    விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

    தரணி கர்ப்ப ஸம்பூதம்

    வித்யுத் காந்தி ஸமப்ரதம்

    குமாரம் சக்தி ஹஸ்தம்ச

    மங்களம் ப்ரணமாம்யஹம்.

     

    தனுசு :

     

    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

    ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

     

    மகரம் :

     

    மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

     

    கும்பம் : 

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

     

    மீனம் :

    மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

    ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

     

    நம்முடைய ராசிக்குரிய சுலோகங்களை, தினமும் பாராயணம் செய்து நம்முடைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவோம்.

     

  • 12

    பயணங்களின் அழகே அப்போது நாம் பார்க்கும் புதிய இடங்களும் சந்திக்கும் புதிய மனிதர்களும்தான். பழக்கமில்லாத இடம், மொழி, மனிதர், தட்பவெப்பம், உணவு, பார்த்திராத கட்டடக்கலை அம்சமுள்ள ஆலயங்கள், அரண்மனைகள், கோட்டை-கொத்தளங்கள்… இவைதான் நம்முடைய பயணங்களைச் சுவாரஸ்யமாக்குகின்றன.

    பழக்கமான இடத்தில் என்னதான் சுற்றிச் சுற்றி வந்தாலும் நம்முடைய மனமும் உடலும் ஓய்வை உணருவதில்லை. அதனால்தான், இந்தியாவில் பக்கத்து மாநிலத்திற்குப் போனால்கூட நமக்கு விநோதமாகப்படுகிறது. முற்றிலும் புதிய இடத்தில்தான் மனம் ஓய்வை உணர்ந்து புத்துணர்ச்சி பெறுவதாக முன்பு ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

    வாரவிறுதியின்போது அருகிலுள்ள இடங்களுக்குச் சிறு-சுற்றுலா செல்வதற்கும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு கணிசமானது. இதை அனுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் நீளமே உள்ள கடற்பாலத்தைத் தாண்டி மலேசியாவுக்குள் நுழைந்ததுமே வரும் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்வும் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

    அதற்காக சிங்கப்பூர் தாழ்த்தி என்றில்லை. சொர்க்கமாகவே இருந்தாலும் தொடர்ந்து அனுபவிக்கும்போது வரும் செல்லச் சலிப்பு அது. இங்கே பார்ப்பதற்கு வேலை எதுவும் இல்லை. விடுமுறைக்காக வந்திருக்கிறோம். ஊரைச் சுற்றி உண்டு களித்து உறங்க வேண்டியது மட்டும்தான் வேலை என்ற எண்ணமே அந்த விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.

    என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தர் அதிகமான பயணங்கள் மேற்கொள்பவரே. தினமும் காலையில் ஒரு புதுநிலத்தில் கண்விழிப்பவர் பேறுபெற்றவர். 1984-இல் நான் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும்போது விகடனில் ஒரு நகைச்சுவைத் தொடர்வந்தது. மெரீனா எழுதியது. தலைப்பு எங்கம்மா என்று நினைவு. அதில் வரும் முக்கியக் கதாபாத்திரம் காசிக்கும் திரிவேணி சங்கமத்துக்கும் தீர்த்தயாத்திரை போய்விட்டு வந்து பேசுவதாக மெரீனா எழுதிய வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது.

    “அகலமான கங்கயைப் பார்த்தப்போ மனுஷாள்லாம் எவ்வளவு அற்பம்னு தோணிடுத்து. இந்தச் சின்ன வாழ்க்கைக்குள்ள எவ்வளவு சண்டை, சச்சரவு..” என்ற தொனியில் இருக்கும் அந்த வசனம். உண்மை. பயணங்களே நம்மைப் பரிசீலனை செய்ய உதவுகின்றன. நாம் வாழும் நாட்டின் நிலையை, புதிய தேசத்தோடு நம்முடைய ஆழ்மனம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது.

    “அடடா இந்த ஊரில் பிறக்கவில்லையே” என்று ஒரு கணமும், “நல்லவேளை ! இந்த ஊரிலெல்லாம் நாம் பிறக்கவில்லை” என்று மறு கணமும் மனம் நினைக்கும். இரண்டுமே ஒருவகையில் நம்மைப் பண்படுத்தும். பிள்ளைகளுக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைப்பதைக் காட்டிலும் அவர்களின் இளவயதில் ஏராளமான பயணங்களுக்கு அழைத்துச் செல்வதே பெற்றோர் செய்ய வேண்டியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. பயணங்களால் மனம் விசாலமடைகிறது.

    அந்த வகையில், எங்கள் அனைவருக்குமே கம்போடியப் பயணம் முக்கியமானது. இந்தியாவுக்குக் கிழக்கே பல்லாயிரம் மைல் தொலைவில் ஒரு தேசம் இந்தியப் பண்பாட்டை, ஆன்மிகப் பாதையை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருவது ஆச்சர்யம்தான். கம்போடிய மங்கல விழாக்களிலும், அமங்கல நிகழ்ச்சிகளிலும் இரண்டு விதமான வைதிகர்களும் இடம்பெறுகிறார்களாம் இன்றளவும். அதுபற்றி அடுத்த பயணத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    உலக அளவில், யோகாசனங்கள் அதிகப் பிரபலமாகி வரும் காலம் இது. அத்தோடு யோகாசனம் பிறந்த நாட்டின் மீதும் சிலருக்கு ஈடுபாடு வந்துவிடுகிறது போலும். அங்கோர் வாட்டில் நாங்கள் சந்தித்த பெண்மணி அந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். முதல் சுற்றுத் தாழ்வாரங்கள் பார்த்து முடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழையும்போது அந்தப் பெண்மணியைச் சந்தித்தோம்.

    இந்தியப் பண்பாட்டின்மீது ஆர்வமுள்ள பிறநாட்டவரோடு பேசுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்தியாவைப் பற்றி அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பற்றி அவர்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் எனக்கு. சிங்கப்பூர் வருமுன், எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிப் பழக்கமில்லை. இருந்தாலும் சமாளிப்பேன்.

    1988-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பகுதிநேரப் பொறியியல் கல்வி வகுப்பு முடிந்து தினமும் இரவு தஞ்சாவூருக்கு ஒரு பாசஞ்சர் ரயிலில் நண்பர்களோடு திரும்பிச் செல்வேன். இரவு ஒன்பது மணிக்கு வகுப்பு முடிந்ததும், அவசர அவசரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு 9.20க்குக் கிளம்பும் ரயிலில் ஏறி உட்கார்ந்தால், பின்னிரவு ஒன்றரை மணிக்குத் தஞ்சாவூர் வந்துவிடும். அப்படி ஆறு மாதம் வரை சென்றிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஒருமுறை ஆஸ்திரேலியப் பயணி ஒருவர் வந்தார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவரோடு சற்று நேரம் உரையாடினேன். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமம் இருந்ததால் எங்கள் பேச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. என்ன பேசிக் கொண்டோம் என்பதும் இப்போது நினைவிலில்லை.

    ஆனால் இப்போது நிலைமை வேறு. என்னால் தைரியமாக ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. வெள்ளைக்கார ஆங்கிலமும் ஓரளவு புரிகிறது. அந்த தைரியத்தில் அந்தப் பெண்மணியோடு பேச்சுக் கொடுத்தேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். யோகாசனம் பற்றிப் படித்து அதைப் பயிற்சி செய்கிறார். அப்படியே இந்தியாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவில் சில இடங்களுக்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார்.

    உலக அதிசயம் என்பதாலும் இந்தியப் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதாலும் அங்கோர் வாட்டைப் பார்க்க வந்ததாகச் சொன்னார். அவருக்கு நான்கு வருணங்கள், நான்கு வேதங்கள், மும்மூர்த்திகள் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. மகாபாரத, ராமாயண இதிகாசங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது.

    ஆகவே, அங்கோர் வாட்டைத் தம்மால் ரசிக்க முடிவதாகச் சொன்னார். தொடர்ந்து இந்தியாவில் பயணம் செய்ய ஆர்வமிருப்பதாகவும் அந்தப் பெண்மணி பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இவர்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.

    நாங்கள் சந்தித்த பெண்மணிக்கு 40, 45 வயதிருக்கலாம். தன்னந்தனியாக அறிமுகமில்லாத ஒரு ஆசிய நாட்டுக்குப் புறப்பட்டு வந்து தான் விரும்பியதைப் பார்த்து ரசித்துவிட்டுப் போகிறார். மகனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமே ! மகளுக்கு 200 பவுன் நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமே ! என்ற கவலையெல்லாம் இவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

    நாம்தான் நமக்காக வாழாமல், நம் சந்ததிகளுக்காக சொத்துச் சேர்த்து வைத்து மறைந்து போகிறோமோ ? வாழையடி வாழையாக நம் குடும்பங்களில் இதுதான் நடக்கிறதோ ? யோசிப்போம். பிள்ளைகள் முக்கியம்தான். ஆனால், நாம் நமக்காக வாழ்வதும் எவ்வளவு முக்கியம் ? பயணங்களும் அது தரும் அனுபவங்களுமே ஈடில்லாத மகிழ்ச்சியை அளிக்கின்றன என்ற எண்ணத்தை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்திக் கொண்டேன்.

    முதல் சுற்றுத் தாழ்வாரத்தின் வடக்குப் பகுதியில், கடவுள்கள் சண்டை போடும் காட்சிகள் ஏராளமாக இருந்தன. எது எது எந்தெந்தக் கடவுள் என்பதைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குள் போட்டியே உருவானது. பிள்ளையார் இருந்தார். சிவன் ரிஷபத்தின் மேலேறியவாறு இருந்தார். கருடனின் மேல் அமர்ந்த விஷ்ணு இருந்தார். யாளி போன்ற இரண்டு உருவங்கள் இருந்தன. அன்னப் பறவை இருந்தது.

    மயில் மீதமர்ந்து ஆறுமுகன் வில்லில் அம்பு தொடுக்கும் சிற்பமும் இருந்தது. போர்க்களக் காட்சிகள் எல்லாம் உக்கிரமாக இருந்தன. கருடனின் முகபாவம் போரில் கத்திக் கூச்சலிடும் பாவத்தில் இருந்தது. கிழக்குப்புறத் தாழ்வாரத்தில் இருந்த சிற்பங்களைக் காட்டிலும் இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் சற்று நெருக்கமாகச் செதுக்கப்பட்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

    மேலும் இந்தப் பக்கத்திலிருந்த சிற்பங்களில் வழுவழுப்புத்தன்மை அதிகமிருந்தது. அது பயணிகளின் கைபட்டு உருவான வழவழப்பா இல்லை இயல்பே இப்படித்தானா என்று தெரியவில்லை. ஆடை, ஆபரண வடிவங்களும் சற்றுத் துல்லியமாகத் தெரிந்தன இந்தச் சிற்பங்களில். அவரவருக்குப் பிடித்த சிற்பங்களின் அருகே நின்று கூடுதல் நேரம் செலவிட்டதால், நாங்கள் ஐவருமே தள்ளித் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கேமராவில் படம்பிடிக்க முடியாமல் எல்லாருமே திறன்பேசிகளைத் தஞ்சமடைந்திருந்தோம்.

    இந்தப் பக்கத்துச் சிற்பங்கள் ஓரளவு நன்கு அடைபட்டன படக்கருவிகளுக்குள். ஐவரும் ஓரிடத்தில் ஒன்றுதிரண்டு, வழிகாட்டியோடு இரண்டாம் சுற்றுத் தாழ்வாரத்தை இணைக்கும் பாதைக்குள் புகுந்து இரண்டாம் சுற்றை அடைந்தோம். இங்கே தூண்களில்தான் புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. முதலில் நினைத்ததுபோல் இங்குள்ள சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி வரும்போதே நடுவிலுள்ள மூன்றாவது முக்கிய அடுக்கு, பலகணி வழியாக வந்து வந்து சென்றது. இந்தச் சுற்றை வேகமாகவே வலம் வந்துவிட்டோம்.

    உயரம் இப்போது அதிகரித்துவிட்டபடியால், சுற்றிலுமுள்ள இடங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. ஒரே பார்வைக்குள் அடங்கும் ஆலயத்தின் அளவு அதிகரித்திருந்தது. அது ஒரு புதுக் கோணத்தைத் தந்தது எங்களுக்கு. இப்போது முக்கிய மூன்றாவது அடுக்கின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிட்டோம். இங்கேயும் இரண்டு நூலக இடிபாடுகள் இருந்தன வடக்கிலும் தெற்கிலும். அதற்குள் ஏறிப் பார்க்கவில்லை.

    திசைக்கு ஒன்றாக நான்கு மேருக்கள். நான்கு பக்கத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட செங்குத்தான படிகள் மேல்புறத்தை நோக்கிச் சென்றன. பக்கத்து மூன்று விகிதத்தில் மொத்தம் 12 படிக்கட்டுகள் இருக்குமென நினைக்கிறேன். படிக்கட்டுகளை ஏறிக் கடக்கும்போது பக்கவாட்டிலுள்ள கைப்பிடிகளைப் பிடித்தவாறுதான் செல்ல முடியும். அவ்வளவு செங்குத்தான படிகள். பொதுவாகப் படிக்கட்டுகள் 45 டிகிரி சாய்மானத்தில் கட்டப்படும். அதற்கும் கீழான சாய்மானம் என்றால் சறுக்குப் பாதை மாதிரி எளிதில் ஏறிவிடலாம். ஆனால் 45 பாகையைத் தாண்டிவிட்டால் படிக்கட்டுகளை ஏறுவதில் சிரமம் அதிகரித்துக் கொண்டே போகும்.

    அதை ஈடுகட்ட படிக்கட்டுகளின் உயரத்தைக் குறைத்தாலும் பத்தாது. மகாமேருவை நோக்கிய அங்கோர் வாட் ஆலயப் படிக்கட்டுகள் அநேகமாக 60 அல்லது 70 பாகைக் கோணத்தில் இருக்குமென்பது என்னுடைய ஊகம். படிகளின் எண்ணிக்கையும் அதிகம். மூன்று, நான்கு மாடி உயரத்துக்குப் படிகள் இருந்தன. அவற்றுள் கிழக்குப் புறத்தில் மட்டும் ஓரிடத்தில் கற்படிகளுக்கு மேலே மரப்படிகள் அமைத்து ஏறிச் செல்ல வழிவைத்துள்ளனர். எஞ்சிய எல்லாப் படிக்கட்டுகளையும் வேலி போட்டு மறித்துள்ளனர்.

    ஏறுவதற்கு ஒன்று. இறங்குவதற்கு ஒன்று என இரண்டு படிக்கட்டுகள். ஏனென்றால், ஒரே படிக்கட்டில் ஏறுபவரும் இறங்குபவரும் சந்தித்தால் விபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகளைப் படிக்கட்டில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துதான் மேலே அனுப்புகிறார்கள். வயதானவர்களைக் கூடவே ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது நல்லது. ஒவ்வொரு படியிலும் நின்றே அடுத்தபடியில் ஏற முடிகிறது.

    இப்படி நாம் முதலில் ஏறி அடைவது வடகிழக்கு மூலையிலுள்ள மேருவின் கீழ்ப்பகுதி. அதன் வாசலின் மேலே உள்ள நிலைப் பகுதியில் நாக தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் கோயில்களில் யாளி, மகர தோரணம் இருக்கும் பெரும்பாலும். இங்கே எல்லா வாயில்களுக்கு மேலேயும் நாக தோரணம்தான். தோரணத்துக்கு உள்ளே பெரும்பாலும் போர்க்களக் காட்சிகள். விலங்குகள். பக்கவாட்டுத் தூண்களில் அப்சரஸுகள். நான்கு திசைகளிலும் உள்ள நான்கு மேருக்களையும் இணைக்கும் தாழ்வாரம் இரண்டு விதமான உயரங்களில் உள்ளது.

    அந்தத் தாழ்வாரத்துக்கும் நடுவிலுள்ள மகாமேருவுக்கும் இடைப்பட்ட இடம் ஒவ்வொரு திசையின் நடுப்பகுதியிலிருந்து மேருவை நோக்கிச்  செல்லும் இணைப்புச் சாளரங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த இடத்தில் நான்கு தொட்டி போன்ற பகுதி உருவாகிப் பள்ளமாக இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது ஏராளமான கற்கள் பெயர்ந்து கிடப்பது தெரிகிறது. நிலநடுக்கத்தின் பாதிப்பா அல்லது காலப் போக்கில் தானாக இடிந்து விழுந்தவையா என்பது தெரியவில்லை.

    இந்தப் பகுதியிலுள்ள ஒரு மண்டபம் வானம் பார்க்கத் திறந்து கிடந்தது. ஆலயத்தின் முன்புறமும் பின்பிறமும் நீண்ட பாதைகள் தெரிந்தன. சுற்றிலும் பசுமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை.. பசுமையைத் தவிர வேறில்லை. மேலே வந்ததும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. வியர்வையில் ஊறியிருந்த சட்டை உலரத் தொடங்கியதால் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது எல்லாருக்கும். ஒவ்வொரு திசையிலும் தெரிந்த காட்சி, ஏற்கனவே பார்த்த காட்சியை விடவும் மேம்பட்டதாக இருப்பது போலிருந்தது எங்களுக்கு.

    எதிரே அடுக்கடுக்காகத் தெரிந்த கோபுரங்கள் கேரள பாணிக் கோயில்களை நினைவுபடுத்தின. நான்கு மூலைகளிலும் தாழ்வாரங்கள் முடியும் இடத்தில் அடுக்கடுக்காக எழுந்து மேரு உருவாகியிருந்தது. இன்னமும் அந்த இடங்களைச் சீரமைக்கும் பணி தொடர்கிறது. ஆலயப் பகுதிகளை மூடி வைத்து உள்ளே வேலை நடப்பதைப் பார்க்க முடிந்தது.

    கீழே இருந்த மண்டபங்கள் இடைவெளியோடு கூடிய பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பார்வையில் அந்த மண்டபங்கள் நமது ஊர் தெப்பக்குளங்களின் நடுவே காணப்படும் நீராழி மண்டபங்கள் போலிருந்தன.

    இந்த உயரத்திலிருந்து தென்படும் காட்சி என்னை என்னவோ செய்தது. பாழடைந்து சிதிலமாகிப் போன ஒரு பேராலயத்தின் மேலே நிற்கிறோம். இதைக் கட்டி முடித்தபோது இந்த இடம் எவ்வளவு புதுக்கருக்குடன் இருந்திருக்கும் ? இரண்டாம் சூரியவர்மனும் இந்த இடத்தில் நின்று பார்த்திருப்பார்தானே ? அப்போது அவர் மனத்தில் என்னென்ன நினைத்திருப்பார் ? உலக அதிசயமொன்றை உருவாக்கிவிட்டோமென்பதை அப்போது அவர் உணர்ந்திருப்பாரா ? அதற்காகப் பெருமைப்பட்டிருப்பாரா ?

    கீழே கற்கள் சிதறிக் கிடந்தன. மேலிருந்து பார்க்கும் கோணத்தில் கோயில் அலங்கோலமாகக் கிடப்பது போல் பட்டது எனக்கு. தொலைவில், மண்ணிலிருந்து மொத்தமாகப் பார்க்கும்போது இருந்த வடிவமைதி இப்போது காணாமற் போயிருந்தது. கோயிலின் சில பகுதிகளில் ஆங்காங்கே பச்சைப் பாசி படர்ந்திருந்தது. காரணமின்றி என்னைச் சோகம் கப்பிக் கொண்டது. மிகப் பழமையான இடங்களில் இருக்கும்போது மட்டுமே என்னால் உணரக் கூடிய வகையான சோகம்….

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com