Blog

  • Sirapamsam niraindha avani month

    தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

    ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

    எனவே தான் ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர். ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் ஆவணியில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக.

  • amman koil palkudam thiruvizha

    சென்னை பூந்தமல்லியில் ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோவில் பால்குடம் எடுக்கும் விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.

    சென்னை பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள  ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன் கோவிலில் 18 ஆம் ஆண்டு பால் குடம் எடுக்கும் விழா நடைப்பெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள்அன்பரசு ஏற்பாட்டில்  நடைப்பெற்ற இவ்விழாவில் திருநங்கைகள் அம்மன் வேடமிட்டு ஆடிய அம்மன் ஆட்டம்,சிலம்பாட்டம்,என பல்வேறு ஆட்டங்கள் நடைப்பெற்றது.

    மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் சேலை அணிந்து ஒரே நேரத்தில் அம்மனுக்கு பால் குடம் எடுத்தனர்.  பூந்தமல்லி பனையாத்தம்மன் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது.

    ஊர்வலத்தின் போது பெண் பக்தைகள் ஓம் சக்தி ஓம் சக்தி என முழக்கமிட்டது கூடியிருந்த அனைவரையும் பக்தி மயத்தில் ஆழ்த்தியது.ஒரே நேரத்தில் ஐயாயிரத்திற்கும் மேபட்ட பெண்கள் பால் குடம் எடுத்த நிகழ்வு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • August 17 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – பக்தி
    ரிஷபம் –    வெற்றி
    மிதுனம் –   வரவு  
    கடகம் –    துன்பம்   
    சிம்மம் –   நிறைவு
    கன்னி –    பணிவு
    துலாம் –     சிரமம்
    விருச்சிகம் – இரக்கம்
    தனுசு –     பரீதி
    மகரம் –    சுகம்  
    கும்பம் –     நலம்
    மீனம் –      சிரமம்
    சந்திராஷ்டமம்    – உத்திராடம், திருவோணம்

     

  • August 17 2023 aadi 32

    ஆகஸ்ட் 17 – ஆடி 32
    சோபகிருது வருடம் – ஆடி 32
    17-ஆக-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை மா 5.49
    நட்சத்திரம் : மகம் இ 8.55
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • aadi amavasai manakkula vinayakar

    ஆடி அமாவாசையொட்டி அருள்மிகு மணக்குள விநாயகர்,  வரதராஜ பெருமாள், சுப்பிரமணியசாமி ஆகியோர்  ஆகியோர் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை புதுச்சேரி கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சுவாமிகளுக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    புதுச்சேரியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரி கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் காந்தி சிலை அருகே கடலில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு அரிசி பூ பழம் காய்கறிகள் என தர்ப்பணம் கொடுத்தனர்.

    தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறியும், வழிபாடு நடத்தியும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி,  ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து தர்ப்பணம் கொடுக்கப்பட்ட பிண்டங்களை கடலில் கரைத்து நீராடி முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    தொடர்ந்து கடற்கரைக்கு வருகை புரிந்த வரதராஜ பெருமாள், மணக்குள விநாயகர், சாரம் சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு நந்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு தீபங்களை ஏற்றி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தவர்கள் வழிபட்டு சென்றனர்.

    புதுச்சேரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு தர்ப்பணங்களை கொடுத்து வழிபாடு நடத்தினார்கள்.

  • rasipurathil vinodham

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் அருகே 33 அடி  ஸ்ரீ சண்டிகருப்பசாமி கோயில்,  ஸ்ரீ நாககன்னி கோவில் அமைந்துள்ளது.இக்கோயிலில்,  ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிடிகாசு  வழங்குவது வழக்கம். பக்தர்கள் பிடிகாசு வாங்கினால் செல்வம் பெருகும்,  தீராத கடன்களில் இருந்து விடுபடவும், செய்யும் தொழில் மேன்மை அடையும்  என்பது ஐதீகம்.

     இந்த ஆலயத்தில் 19ம் ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு  பிடிக்காசு வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்த பிடிக்காசு வாங்கும்  நிகழ்ச்சியில் 108 மூலிகைகளை கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க  அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து கருப்புசாமி மாதிரி வேடம் அணிந்த ஒருவர் பக்தர்களுக்கு அள்ளி அள்ளி பிடிகாசுகளை வழங்கினார், பக்தர்கள் பய பக்தியுடன் பிடிக்காசுகளை வாங்கி சென்றனர் இதில்  நாமக்கல், சேலம், ஆத்தூர், கரூர்,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

  • August 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் –    மேன்மை
    மிதுனம் –   நேர்மை
    கடகம் –    லாபம்   
    சிம்மம் –   களிப்பு
    கன்னி –    சுகம்
    துலாம் –     பயம்
    விருச்சிகம் – போட்டி
    தனுசு –     பாராட்டு
    மகரம் –    பாசம்
    கும்பம் –     தெளிவு
    மீனம் –      அன்பு
    சந்திராஷ்டமம்    – பூராடம், உத்திராடம்

     

  • August 16 2023 aadi amavasai

    ஆகஸ்ட் 16 – ஆடி அமாவாசை
    சோபகிருது வருடம் – ஆடி 31
    அமாவாசை
    16-ஆக-2023 புதன்
    ஆடி அமாவாசை
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் : அமாவாசை ம 3.50
    நட்சத்திரம் : ஆயில்யம் மா 6.22
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • punniyam tharum aadi amavasai

    வாழ்வில் வசந்தம் பெற , வம்ச வ்ருத்தி ஏற்பட , முன்னோர் சாபம் போக்கிட , தந்தை இழந்தோர் , பெற்றோர் இருவரையும் இழந்தோர் அவசியம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம்கிட்டும்.

    தர்பணம்:
    ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.

    தானம் தர்மம்:
    அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

    கோபூஜை:
    பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புண்ணியத்தை  தரும்.

  • aadi amavasai viradha murai

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக் கொள்ள முடியும். விரதங்களில் பலவகை உண்டு. இறைவனை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.

    அதில் அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளைகளால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள்.இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீவினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.

    எனவே ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்து விட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை மூதாதையர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்தமானவர்கள் அணிந்து கொள்ளலாம்.

    அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். மேலும் ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.