Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   தடங்கல்
    ரிஷபம் – நஷ்டம் 
    மிதுனம் – வெற்றி  
    கடனம் – ஆர்வம் 
    சிம்மம் – புகழ்
    கன்னி – சுபம்  
    துலாம் –   ஏமாற்றம் 
    விருச்சிகம் – பயம்  
    தனுசு – லாபம் 
    மகரம் –   களிப்பு
    கும்பம் – வரவு 
    மீனம் – காரியசித்தி
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி

  • Sri Rangam Panguni car festival

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

    108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி தேர்விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு பங்குனி தேர்த்திருவிழா கடந்த மார்ச் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அந்தவகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நம்பெருமாளை வழிபட்டனர். 

    இதனை தொடர்ந்து நாளை பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

  • Patteswarar theppa thiruvizha

    நாற்று அறுவடை திருவிழாவின் நிறைவாக பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி உடன் தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பாக ஆனி நாற்று நடும் விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து கடவுள் மனிதனாக வந்து நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வு விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

    இதில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் எழுந்தருளிய தெப்பத்தேர் விழா நேற்றிரவு பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவ்விழா பாரம்பரியமாக பழமை மாறாமல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது . பட்டிஸ்வரர் உடன் பச்சைநாயகி அம்மன் வீதி உலா நடைபெற்றது. தேவேந்திர குல சமுகத்தினர் மற்றும் பட்டீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

  • March 22 subamugurthanaal 

    மார்ச் 22 – சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – பங்குனி 8
    22-மார்-2019 வெள்ளி  
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    அ.கா    4.02
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    1.20
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆர்வம் 
    ரிஷபம் – அசதி 
    மிதுனம் – பாராட்டு 
    கடனம் – நட்பு
    சிம்மம் – வெற்றி 
    கன்னி – நிம்மதி 
    துலாம் –   சோதனை
    விருச்சிகம் – ஆர்வம் 
    தனுசு – நலம் 
    மகரம் –   சிந்தனை 
    கும்பம் – பரிசு
    மீனம் – அச்சம் 
    சந்திராஷ்டமம்    – பூரட்டாதி, உத்திரட்டாதி
     

  • Subramaniya swamy Palabishegam

    பூவிருந்தவல்லி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று முருகப்பெருமானுக்கு பால்  அபிஷேகம் செய்தனர்.

     சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா  வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் நிற சேலை அணிந்து பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக பண்ணையத்தம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க  ஆலயத்தை வந்தடைந்தது.பின்னர் முருக பெருமாளுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.
     

  • Thiruthani murugan Palabishegam


    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் காவடி எடுத்து வந்து அலகு குத்தியும் மலைக்கோயில் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

     அப்பொழுது பங்குனி உத்திர சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் முன்னிலையில் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி அளித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

  • Panguni Uthiram Important points

    பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

    பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 

    சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் பங்குனி உத்திர திருநாள். 

    அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

    முருக பெருமான் தெய்வானையை பங்குனி உத்திர நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். 

    ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். 

    மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 

    பங்குனி உத்திர நாள் அன்று காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். 

    அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் பங்குனி உத்திர நாள் தான். 

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். 

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். 

    திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

    பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வருகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

    அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

    திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
     

  • March 21 Panguni uthiram

    விளம்பி வருடம் – பங்குனி 7
     பரமக்குடி முத்தலம்மன், திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் தேர்
    21-மார்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பவுர்ணமி    கா    7.41
    நட்சத்திரம்    :    உத்திரம்    ம    2.29
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்,பூரட்டாதி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஓய்வு 
    ரிஷபம் – சாந்தம் 
    மிதுனம் – உழைப்பு  
    கடனம் – உற்சாகம் 
    சிம்மம் – எதிர்ப்பு
    கன்னி – லாபம் 
    துலாம் –   ஜெயம் 
    விருச்சிகம் – செலவு
    தனுசு – தனம் 
    மகரம் –   பிரிவு
    கும்பம் – சுகம் 
    மீனம் – அனுகூலம் 
    சந்திராஷ்டமம்    – சதயம், பூரட்டாதி