Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Indraya naal eppadi

    மார்ச் 25 – இன்றைய நாள் எப்படி 
    விளம்பி வருடம் – பங்குனி 11
    25-மார்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    இ    1.17
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    11.44
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நிறைவு
    ரிஷபம் – மேன்மை 
    மிதுனம் – ஆதாயம் 
    கடனம் – அசதி 
    சிம்மம் – நற்செயல்
    கன்னி – உயர்வு 
    துலாம் –   வரவு 
    விருச்சிகம் – ஆக்கம் 
    தனுசு – அனுகூலம் 
    மகரம் –   நட்பு 
    கும்பம் – நஷ்டம்  
    மீனம் – ஜெயம் 
    சந்திராஷ்டமம்    – அசுவினி,பரணி
     

  • Thiruparankundram car fest

    ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான மக்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனிப் பெருவிழா விற்கான கொடியேற்றம் 12ஆம் தேதி நடைபெற்றது விழாவினையொட்டி தினமும் தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும் மாலையில் தங்க மயில் வாகனம் அன்ன வாகனம் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது
    இன்று தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு கருப்பண்ண சுவாமி சன்னதியில் எழுந்தருளினர். அங்கு பூஜை செய்யப்பட்டு 5 .45 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார் 

    .சரியாக ஆறு இருபத்தி ஐந்து மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க கோயில் வாசல் நிலையிலிருந்து தேர் புறப்பாடு ஆனது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்து கிரிவலப் பாதை வழியாக சென்றனர். தேருக்கு முன்பாக விநாயகர் சிறிய சட்டத்தேரில் புறப்பாடு ஆனார்.

     தேரோட்ட திருவிழாவையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கியும் காவடி எடுத்தும் முருகப் பெருமானே வணங்கினர் விழாவில் நிறைவு நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது
     

  • Dhyanam 3

    அதிக வெளிச்சம் குறைந்த தனியறையில் வசதிக்கேற்ப சுகமாக, உடல் இறுக்கமற்ற நிலையில் நிமிர்ந்து உட்காருக, இதற்கு வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் என்பவற்றைப் பயன்படுத்தலாம்.

     எவ்வாறு உட்கார்ந்து இருப்பினும் முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க. தியானம் சித்திக்க இது உதவும்.

    தியானம் செய்வதில் சுயநலம் இருக்கக் கூடாது. உலகத்துக்காக, சமாதானத்துக்காக, மக்களின் நன்மைக்காக தியானம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தியானம் செய்ய ஒதுக்கி அதனைப் பயன்படுத்தும் போது மனம் பழக்கப்பட்டு இலகுவில் தியானநிலை சித்திக்கும். 

    வடக்குப் பக்கம் பார்த்து தியானம் செய்வது சிறப்பானதாகும். சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறைந்த பின்னரும் வெறும் வயிற்றில் தியானம் செய்வது மிகப் பொருத்தமுடையதாக இருக்கும்.
     

  • Lemon bid

    முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சம் பழம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு ஏலம் போனது

     விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இங்கு இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 

    தினமும் சுவாமி வீதியுலாவும், 18 ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 20 ம் தேதி தேரோட்டமும், 21 ம் தேதி காவடி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. 11 ம் நாளான நேற்று (22.03.2019 வெள்ளி) நள்ளிரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இந்த பூஜையில் திருவிழா காலங்களில்  கருவறையில் உள்ள வேலில் சொருகப்படும் எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடப்பட்டன.  

    மொத்தம் 9 பழங்கள் 12 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையிலான 9 நாள் பழங்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டது. நள்ளிரவு 11 மணிக்கு துவங்கிய ஏலத்தில் முதல்நாள் பழம் ரூ.41 ஆயிரத்திற்கு ஏலம் போனது. 2 ம் நாள் பழம் ரூ. 22 ஆயிரத்திற்கும், 3 ம் நாள் பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 4 ம் நாள் பழம் ரூ. 8 ஆயிரத்து 100 க்கும், 5 ம் நாள் பழம் ரூ.16 ஆயிரத்திற்கும், 6 ம் நாள் பழம் ரூ.10 ஆயிரத்திற்கும், 7 ம் நாள் பழம் ரூ.21 ஆயிரத்திற்கும், 8 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும், 9 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு 9 பழங்களும் ஏலம் போனது

    கடந்த ஆண்டு 9 பழங்களும் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 900 க்கு ஏலம் போனது. பழத்தை ஏலம் எடுக்க  உள்ளூர் காரர்களுக்கே உரிமை என்பதால் அவர்களை உடன் வைத்துக்கொண்டே ஏலம் கேட்கப்பட்டது. வெளியூர்காரர்களுக்கு ஏலம் கேட்க உரிமை இல்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பதால் போட்டிபோட்டுக்கொண்டு பழத்தை ஏலம் எடுத்தனர். பழத்தை ஏலம் எடுத்த தம்பதியர்,  குளித்துவிட்டு ஜோடியாக ஈரத்துணியுடன் சாமி முன்னால் மண்டியிட்டு பழத்தை வாங்கிச்சென்றனர்.. 

    பின்னர் அவர்களுக்கு *இடும்பனுக்கு வைத்து படைக்கப்பட்ட கருவாட்டு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏலம் முடிந்தவுடன்  கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் கருவாட்டு சாதம் வழங்கப்பட்டது ஏலத்தை நாட்டாமை பாலகிருஷ்ணன் ஆணி தைத்த செருப்பின் மீது ஏறி நின்று  நடத்தினார். 
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   புகழ் 
    ரிஷபம் – இன்பம்  
    மிதுனம் – உதவி  
    கடனம் – பொறுமை 
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – ஏமாற்றம்
    துலாம் –   வெற்றி
    விருச்சிகம் – சோதனை  
    தனுசு – அலைச்சல்
    மகரம் –   மேன்மை 
    கும்பம் – சுபம் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி
     

  • march 24 Indraya naal eppadi

    மார்ச் 24 – சங்கடஹர சதுர்த்தி
    விளம்பி வருடம் – பங்குனி 10
     சங்கடஹர சதுர்த்தி 
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    24-மார்-2019 ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    1.48
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    11.53
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Murugan thiru kalyanam

    ஆறு படை வீடுகளில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாணம் இன்று நடைபெற்து.

    மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது .

    திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடந்தது திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் .வந்தடைந்தனர். 

     அதற்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மணக்கோலத்தில் தெய்வானையுடன் குளக்கரையில் பெற்றோர்களை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது .

    பின்பு சுவாமி கோயில் முழுக்க மண்டபத்தில் எழுந்தருளி கண்ணூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது அதனைத் தொடர்ந்து கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிகள் எழுந்தருளினர் அங்கு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றது யாகசாலை பூஜை முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது அதனை தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் திருமண சம்பிரதாயங்களும் நடந்தன திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
     

  • Madurai chitirai thiruvizha

    உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 19-ந் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார். 

    சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்…. 

    ஏப்ரல் 4 –  மீனாட்சி- சுந்தரேசுவர் கோவிலில் வாஸ்து சாந்தி, நிலத்தேவர் வழிபாடு 

    ஏப்ரல் 8 – காலை 10.05 மணியில் இருந்து 10.29 மணிக்குள் கொடியேற்றம் 

    ஏப்ரல் 9 – தங்க சப்பர வாகனம், பூத அன்ன வாகனம்

    ஏப்ரல் – 10 தங்க சப்பர வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

    ஏப்ரல் –  11 தங்கப் பல்லக்கு வாகனம்

    ஏப்ரல் – 12 தங்க சப்பர வாகனம், தங்க குதிரை வாகனம்

    ஏப்ரல் – 13 தங்கம், வெள்ளி ரி‌ஷப வாகனம்

    ஏப்ரல் –  14 சிம்மாசனங்களில் நந்திகேஸ்வரர், யாழி வாகனம்

    ஏப்ரல் – 15 பட்டாபிஷேகம்

    ஏப்ரல் – 16 திக்கு விஜயம் 

    ஏப்ரல் – 17 சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 

    ஏப்ரல் – 17 இரவு 8 மணிக்கு கல்யாண கோலத்தில் சுவாமி, அம்மன் பூப்பல்லக் கில் வீதி உலா 

    ஏப்ரல் – 18 காலை 5.45 மணிக்கு சுவாமி-அம்மன் தேரோட்டம் நடக்கிறது

     ஏப்ரல் – 19 தீர்த்தவாரி, தேவேந்திர பூஜையுடன் இரவு அம்மன், சுவாமி ரி‌ஷப வாகனத்தில்புறப்பாடு … சித் திரை திருவிழா நிறைவு.

    அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா…. 

    ஏப்ரல் 15 அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்துக்கு  எழுந்தருளுகிறார்.

    ஏப்ரல் 17 கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.

    ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு மதுரை மூன்றுமாவடி பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை

    ஏப்ரல் 19 கள்ளழகர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளுகிறார்.

    ஏப்ரல் 20 ராமராயர் மண்டகப்படியில் இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சி

    ஏப்ரல் 21 இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணம் 

    ஏப்ரல் 22 கள்ளழகர்  பூப்பல்லக்கில் புறப்பட்டு

     ஏப்ரல் 23 அழகர் கோவிலை சென்றடைகிறார்.

  • March 23 Indraya naal Eppadi

    மார்ச் 23 – திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்
    விளம்பி வருடம் – பங்குனி 9
    23-மார்-2019 சனி  ரஜப்15
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    2.46
    நட்சத்திரம்    :    சித்திரை    ம    12.26
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்