இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – வருத்தம்
மிதுனம் – நன்மை
கடனம் – அமைதி
சிம்மம் – செலவு
கன்னி – ஆதரவு
துலாம் – உதவி
விருச்சிகம் – பாசம்
தனுசு – சுகம்
மகரம் – நட்பு
கும்பம் – போட்டி
மீனம் – கோபம்
சந்திராஷ்டமம் – அனுஷம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
Rasi Palangal
-
April 9 Indraya Naal Eppadi
ஏப்ரல் 9 – இன்றைய நாள் எப்படி…
விளம்பி வருடம் – பங்குனி 26
09-ஏப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : சதுர்த்தி
திதி நேரம் : சதுர்த்தி ம 3.18
நட்சத்திரம் : கார்த்திகை கா 9.36
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Siva peruman meedhu Sooriyan
காட்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 22 ஆம் நாள் முதல் 10 நாட்கள் இத்திருகோவிலில் உள்ள சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.
அதே போல் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 22 முதல் சித்திரை 1 வரை ஏழு நாட்கள் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது. சிவன் மீது சூரியஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை ஆறு மணி முதல் 6.30 வரை நடைபெறும். இந்த அதிசய நிகழ்வு அகவே சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுவதால் இந்த நிகழ்வை காண மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு எழுபிரவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகின்றது.
-
Thookka Nerchai vizha
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற குழந்தைகள் தூக்க நேர்ச்சை வழிபாட்டு துவங்கியது. 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. நிகழாண்டு விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சமயச் சொற்பொழிவு, தூக்கக்காரர்களின் நமஸ்காரம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தூக்கக்காரர்கள் பிரதான பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி பஞ்சகவ்ய முழுக்கல் செய்து, பூஜைக்குப் பின்னர் கோயிலை அடைந்து நமஸ்காரத்தில் ஈடுபடுவர். மாலை 6 மணிக்கு தூக்க நிகழ்வின் வெள்ளோட்டமான வண்டியோட்டம் நடைபெறும்.
திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நேர்ச்சை இன்று தொடங்கி உள்ளது. அதிகாலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார். மாலை 6 மணி முதல் தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 1432 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நேர்ச்சை நிறைவடைந்த பின்னர், குருசி தர்ப்பணத்துடன் விழா நிறைவடையும்.
தூக்கத் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
Madurai Chitirai Festival
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேத மந்திரங்கள் முழங்க சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக்விஜயமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17ம் தேதியும் , வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடை பெறுகிறது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – செலவு
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – சுகம்
கடனம் – பெருமை
சிம்மம் – பயம்
கன்னி – நற்செய்தி
துலாம் – நன்மை
விருச்சிகம் – போட்டி
தனுசு – மேன்மை
மகரம் – அச்சம்
கும்பம் – உதவி
மீனம் – வரவு
சந்திராஷ்டமம் – விசாகம் -
April 8 Kiruthigai
விளம்பி வருடம் – பங்குனி 25
கார்த்திகை
08-ஏப்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை ம 3.59
நட்சத்திரம் : பரணி கா 9.31
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Peacock Feather
இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?
எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் ,செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
சனி தோஷம் நீங்க….
மூன்று மயில் இறகை ஒன்றாக இணைத்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்குமாம்.வாஸ்து தோஷம் நீங்க…
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகை ஒன்றாக சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, அதை பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்துவினால் ஏற்பட்ட தோஷம் நீங்குமாம்.செல்வம் அதிகரிக்க…
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் மயில் இறகு ஒன்றை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.எதிர்மறை ஆற்றல் நீங்க…
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.உற்பத்தி மேம்பட….
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.ஒற்றுமை ஓங்க…
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். -
Thirupathy Secrets
திருப்பதி என்றாலே நல்ல திருப்பங்களை கொடுக்க கூடிய இடம் தான் . ஏழுமலையானை எந்த தினத்தில் வணங்கினால்,செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பதை பணவளக்கலை தெரிவித்துள்ளது
ஏழு சக்கரத்தையும் ஆதாரமாக வைத்து, ஏழு சக்கரங்களையும் முழு வீச்சில் இயக்கி,ஏழு மலையிலும் பிரசிக்க வைத்து,அவர் கையில் இருக்க கூடியது சொர்ண முத்திரை,சொர்ணசக்கரம்..சொர்ண வைரவர் தான் செல்வத்திற்கு அதிபதி..அதனால் தான் செல்வம் அங்கு வந்து சேருகிறது. கடன் பிரச்னை,தொழில் பிரச்சனை என அனைத்திற்கும் ஒரு நல்ல வழி கிடைக்கும்.செல்வம் பெருகும்…ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும்..
தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று,காலை நேரத்தில், ஏழுமலையானை வழிபட்டால் கண்டிப்பாக வாழ்வில் நடக்கும் பல அற்புதங்களை கண் கூடாக பார்க்க முடியும். 12 மாதங்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமாம். அதாவது தை மாதம் தொடங்கி மார்கழியில் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சென்று வர படிப்படியாக கண்டிப்பாக செல்வம் பெருகும் என்பது ஐதீகம்
-
April 7 Indraya naal eppadi
ஏப்ரல் 7 இன்றைய நாள் எப்படி
விளம்பி வருடம் – பங்குனி 24
07-ஏப்-2019 ஞாயிறு
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை மா 4.09
நட்சத்திரம் : அசுவினி இ 8.54
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சுவாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்