Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • vazhukku maram eri poojai porul

    சிவகங்கை மாவட்டம்  ஏரியூர் அருகே சென்றாய பெருமாள், திம்மராய பெருமாள் எதிர் சேவையின் போது வழுக்கை மரத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து மரம் ஏறி எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    ஏரியூர் அருகே ஏர்கோல் பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் மற்றும் பூச்சியூர் சென்றாய பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. பழைய காலம் முறைப்படி அண்ணன் சென்ராயப்பெருமாளும், தம்பி திம்மராயப்பெருமாளும் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழாவில் எதிர் சேவை கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் பூச்சியூர், ஆலமரத்தூர், காட்டு மோட்டூர், ஆரல் குந்தி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, நரசிம்மேடு, சின்னக்கானூர் காடு, மட்டக்கல் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நிகழ் ஆண்டிற்கான திருவிழா புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் நடத்தி வந்தனர்.

    விழாவில் சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் 18 கிராமத்திற்கு சென்று பால், தயிர், திருநீர், நெய், பழங்கள், பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகளுடன் பக்தர்களுக்கு பள்ளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அண்ணன், தம்பி எதிர் சேவை வியாழக்கிழமை ஏர்கோல் பட்டி பகுதியில் நடைபெற்றது.

    இதில் ஊர்வலமாக எடுத்த வரப்பட்ட சென்றாயப்பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள், பஞ்சபாண்டவர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், திரௌபதி அம்மன், சகாதேவன், போர் மன்னன், பிராமணர் உள்ளிட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் எதிர் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது பழங்கால முறைப்படி எதிர்சேவையின் போது பூஜை செய்யப்படும் பொருட்கள் கோயில் வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த வழுக்க மரத்தின் மீது இருந்த நிலையில், இளைஞர்கள் ஒன்றிணைந்து 50 அடி நீளம் கொண்ட வழுக்க மரத்தின் மீது ஏறி பூஜை பொருட்களைக் கொண்டு வந்து எதிர்சேவை நிகழ்வினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இதில் 18 கிராம ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • thiruchendur aavani festival

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா 4-வது நாளான இன்று சுவாமி குமரவிடங்க பெருமாள் வெள்ளி யான வாகனத்திலும், வள்ளியம்மாள் வெள்ளி சரப வாகனத்திலும், எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     
    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும்  வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ம் திருநாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

     விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது.

     

  • krishnajayanthi uriyadi

    புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. உறி அடித்தும், கண்ணன், ராதை வேடமணிந்தும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

    தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் தேய்பிறையின் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்கிறது. புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முத்திரையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தராஜா பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கோவிந்தராஜா பெருமாளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் தாழியுடன் கிருஷ்ண பெருமாள் உட்புறபாடு நடைபெற்று கோவிலின் முன்பு எழுந்தருளினார்.

    தொடர்ந்து கிருஷ்ணனை வரவேற்கும் வகையில் பூக்கள் மற்றும் வெண்ணையால் நிரப்பட்ட உரிய அங்கிருந்த பக்தர்கள் உடைக்க கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பெண்கள், கண்ணன், ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் பெருமாளை வழிபட்டு சென்றனர். கோவிந்தா கோவிந்தா என பாராயணம் பாடியும் கோவிந்தராஜ பெருமாளை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

  • September 09 2023 Indrayanaal

    செப்டம்பர் 9 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஆவணி 23
    09-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 10.48
    நட்சத்திரம் : திருவாதிரை மா 6.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 08 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  அன்பு
    ரிஷபம் –    கவலை
    மிதுனம் –   பரீதி  
    கடகம் –    சுகம்  
    சிம்மம் –   வெற்றி
    கன்னி –    சுகவீனம்
    துலாம் –     தீரம்
    விருச்சிகம் – எதிர்ப்பு
    தனுசு –     வரவு
    மகரம் –    ஆசை
    கும்பம் –     நலம்
    மீனம் –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்

  • September 08 2023 Indrayanaal

    செப்டம்பர் 8 – எழுத்தறிவு தினம்
    சோபகிருது வருடம் – ஆவணி 22
    08-செப்-2023 வெள்ளி
    எழுத்தறிவு தினம்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி இ 9.47
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் மா 5.4
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • September 07 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    செலவு   
    மிதுனம் –   தெளிவு
    கடகம் –    லாபம்
    சிம்மம் –   பரிசு
    கன்னி –    பரிவு
    துலாம் –     உழைப்பு  
    விருச்சிகம் – கவனம்
    தனுசு –     நன்மை
    மகரம் –    பக்தி
    கும்பம் –     நலம்
    மீனம் –      உதவி
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • September 07 2023 Indrayanaal

    செப்டம்பர் 7 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – ஆவணி 21
    07-செப்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி மா 6.14
    நட்சத்திரம் : ரோகிணி ம 3.59
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Thirupathy 2 crores golden flower

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2  கோடி மதிப்புள்ள 108 தங்க தாமரை நன்கொடையாக வழங்கிய பக்தர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த டாக்டர் ராஜீவ் ரெட்டி ரூ. 2  கோடி மதிப்புள்ள தங்க தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அஷ்டதள பாத பத்ம ஆரதனை சேவைக்காக 108 தங்க தாமரை மலர்களை  லலிதா ஜூவல்லர்ஸில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.

    இந்த தங்க தாமரை மலர்களை நன்கொடையாளர் ராஜீவ் ரெட்டி   லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண் குமாருடன் இணைந்து  ஏழுமலையான்  கோயிலிலுக்கு  வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிப்பாடு செய்தனர். பின்னர்  அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள்  சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர்  மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.

  • Krishnar chutties

    தென்காசி  காசி விசுவநாதர் கோயில் முன்பு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விசுவநாதர் கோயில் முன்பு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை சிவன் முருகன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தனர்.

    பெரிய கோயில் முன்பிருந்து பேரணியாக சென்றனர் கோயில் முன்பு தொடங்கிய இந்த பேரணி ரத வீதியை சுற்றி மீண்டும் கோயில் முன்பு நிறைவு பெற்றது இதில் குழந்தைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.