Author: சக்தி ஆன்லைன் டீம்

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 6 – 2018 வியாழன்
    விளம்பி வருடம் – ஆவணி 21
    ஏகாதசி
    சுபமுகூர்த்த நாள்
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30 :
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி கா 9.24
    நட்சத்திரம் : புனர்பூசம் ம 1.22
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – யோகம்
    கடனம் – இன்பம்
    சிம்மம் – சிரத்தை
    கன்னி – ஜெயம்
    துலாம் நன்மை
    விருச்சிகம் – செலவு
    தனுசு – பகை
    மகரம் – கீர்த்தி
    கும்பம் – தெளிவு
    மீனம் – அமைதி

  • chennai-kaligambal-sirappugal

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.
    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640இல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐபி பக்தர்தான் சத்ரபதி சிவாஜி.

    1677இல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார் சத்ரபதி சிவாஜி. அப்போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர் (Streynsham Master). இவர் ஏற்கனவே சிவாஜியின் வீரத்தைப் பார்த்திருக்கிறார். 1670இல் சிவாஜி சூரத் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையைத் தாக்கியபோது அதனை எதிர்கொண்டவர் இதே ஸ்ட்ரெயின்ஷாம் மாஸ்டர்தான்.

    தனது தென்னகப் படையெடுப்பால் வேலூர், செஞ்சி, ஆற்காடு ஆகிய பகுதிகளை கைப்பற்றிய சிவாஜியின் அடுத்த குறி சென்னைதான் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் மெட்ராஸ்வாசிகள் அடுத்து என்ன எனத் தெரியாமல் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இப்படி நிமிடங்கள் திக்..திக்.. என கடந்து கொண்டிருந்த நிலையில், 1677, மே 14ஆம் தேதி சிவாஜியின் தூதர் ஒருவர் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.

    சத்ரபதி சிவாஜி சில விலை உயர்ந்த கற்களையும், விஷமுறிவு மருந்துகளையும் கேட்பதாகவும், அதற்குரிய பணத்தை அளித்து விடுவதாகவும் அந்த தூதர் தெரிவித்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் பணம் எதையும் பெறாமல் சிவாஜி கேட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். சிவாஜி சென்னையைத் தாக்காமல் இருக்க என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

    சில நாட்கள் கழித்து மீண்டும் சில கோரிக்கைகளோடு திரும்பி வந்தார் சிவாஜியின் தூதர். இம்முறை வாங்கும் பொருட்களுக்கு உரிய விலையை கண்டிப்பாக கொடுக்கும்படி சிவாஜி வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இரண்டாம் முறையும் விலையில்லா பொருட்களே அவருக்கு வழங்கப்பட்டன. மூன்றாவது முறையாக மீண்டும் வந்த தூதர், இம்முறை சில ஆங்கிலேய பொறியாளர்களை சிவாஜி அழைத்து வரச் சொன்னதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாதென மிகவும் பணிவாக மறுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதனால் ஆத்திரமுற்று சிவாஜி சென்னை மீது படையெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே சில அரசியல் மாற்றங்கள் காரணமாக சிவாஜி மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.

     

    காளிகாம்பாள் கோவிலில் உள்ள சிவாஜி பற்றிய குறிப்பு

    இந்த இடத்தில்தான் வரலாற்றில் ஒரு புதிர் அவிழ்க்கப்படாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. சிவாஜி சென்னைக்குள்ளேயே வரவில்லை என்கிறார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால் காளியின் பக்தரான சிவாஜி, யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து தம்புசெட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசித்துவிட்டுச் சென்றார் என்கிறார்கள் சிலர். அக்டோபர் 3, 1677இல் சிவாஜி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு உறுதியான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை.

    மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.

    சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

    – பார்த்திபன், வரலாற்று ஆய்வாளர் (தினத்தந்தியில் வெளியான கட்டுரையில் இருந்து..)

    —————

    பார்த்திபன் – பத்திரிகையாளர், வரலாற்று ஆய்வாளர். சென்னை மாநகரம் பற்றி மூன்று புத்தகங்களை எழுதி இருக்கிறார். அந்தக்கால சென்னை பற்றி தினத்தந்தி நாளிதழில் 100 வாரங்கள் கட்டுரை எழுதியவர். இந்தியாவின் முக்கியமான மாநகரங்களில் ஒன்றான சென்னையைப் பற்றிய ஏராளமான தகவல்களை தெரிந்துவைத்திருப்பவர். அவற்றை சுவைபட எழுதவும் செய்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.

  • srirangam-uriadi-urchavam

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற உறியடி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடை பெறும் உறியடி உற்சவம் மிகவு ம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது. உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது.

    காலை 7.15க்கு கிருஷ்ணர் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து எண்ணெய் விளையாட்டு கண்டருளி 9 மணிக்கு சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சியார்கள், கிருஷ்ணருடன் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தார்.

    இதையடுத்து மாலையில் மண்டபத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் நீண்ட சவுரி முடியுடன் முன்செல்ல ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பின்தொடர்ந்து வந்தார்.

    உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணெய் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியின் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது. பானை உடைந்தபோது கீழே சிதறிய பால், தயிர், வெண்ணெயை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து உண்டனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

  • thirupathiyil-silirka-vaikkum-sila-thoranam

    சிலா தோரணம். யாரோ செதுக்கியதல்ல இது; இயற்கையாகவே அமைந்தது. உலகிலேயே மூன்று இடங்களில் தான் இந்த அமைப்பு இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில் உள்ள கூடா வானவில். அடுத்தது, இங்கிலாந்தில் இருக்கும் பால்ட்ரேடியம் படிகப் பாறைகள். மூன்றாவது நம் திருப்பதியில் இருக்கிறது.

    வேங்கடவன் ஆட்சி செய்யும் திருமலையில் ஒரு பாறைப்பகுதியில் அமைந்திருக்கிறது இந்த சிலா தோரணம். இது உருவாகி சுமார் 150 கோடி வருடங்களாவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த சிலா தோரண அமைப்புள்ள இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த புற்றில் இருந்துதான் வேங்கடவன் வெளிப்பட்டாராம். எனவே இது திருமலைவாசனின் அவதார இடமாகவும் கருதப்படுகிறது.

    திருமலையானின் சந்நதிக்குப் பின்புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த சிலா தோரணத்தை அருங்காட்சிப் பொருளாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். திருமலையான் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அடுத்த முறை திருப்பதி செல்லும்போது இந்த சிலாதோரணத்தையும் கண்டு வாருங்களேன்.

  • thirupathi-thirukudai-oorvalam

    திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடை ஊர்வலத் திருவிழா, சென்னையில் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.

    திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையான் சேவைக்காக ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாகச் சென்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இதில், 2 திருக்குடைகள் திருச்சானூர் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்தத் திருக்குடைகள், கருடசேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உற்சவங்களில் பயன்படுத்தப்படும்.

    தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவாக நடத்தப்படும் ‘திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருப்பதி திருக்குடை ஊர்வலத்தைத் தொடங்கிவைக்கிறார். கன்னியாகுமரி, வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தா மகராஜ் ஆசியுரை வழங்குகிறார்.

    திருப்பதி திருக்குடை ஊர்வலம், 16-ம் தேதி திருமலையை அடைகிறது. அங்கு, மாட வீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் மதியம் 3 மணிக்கு முறையாக சமர்ப்பணம் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 5
    விளம்பி வருடம் – ஆவணி 20
    ஆசிரியர் தினம்
    05-செப்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00 :
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 11.46
    நட்சத்திரம் : திருவாதிரை ம 2.58
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவனம்
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – வெற்றி
    கடனம் – மேன்மை
    சிம்மம் – நன்மை
    கன்னி – பயம்
    துலாம் – பாசம்
    விருச்சிகம் – ஏமாற்றம்
    தனுசு – வரவு
    மகரம் – தடங்கல்
    கும்பம் – ஆக்கம்
    மீனம் – லாபம்

  • nalam-tharum-narsimar-koilgal

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

    சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.

    கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது.

    விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

    விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

    காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

    திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

    ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது.

    திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

    திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

    திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப்பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

    தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

    மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.

     

  • thirucheduril-kudavruvayil-deeparadhanai

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழாவின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு குடவருவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோயிலில் கடந்த ஆக. 30-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளிச்சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். மாலையில் மேலக்கோயிலில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.

    விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வரும் 5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் மற்ற திருவிழா நாள்களில் வழக்கம்போல அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

  • pillayar-koil-kodiyettram

    விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா கொடியேற்றப்பட்டது.

    கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்தது. உடன் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது. பின்னா் கொடிமரத்தில் வலம் வரப்பட்ட வெண்பட்டு சுற்றப்பட்டு கொடி மரத்திற்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

    இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகா் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார். தினமும் 2-ம் திருநாள் 8-ம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இரவு ஒவ்வொரு நாளும் சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

    செப்.9 ஞாயிற்றுக்கிழமையன்று 6-ஆம் திருவிழாவாக மாலை 5 மணிக்கு கஜமுஹாசுர சம்ஹாரமும், செப்.11 செவ்வாய்கிழமையன்று திருத்தேரோட்டமும் அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவா் வருடத்திற்கு ஒருமுறை காட்சி தரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தருவார். தொடா்ந்து 10-ம் திருநாளான விநாயகா் சதுா்த்தி அன்று காலை கோயில் திருக்குளத்தில் விநாயகா் சதுா்த்தி தீா்த்தாவாரி உற்சவமும் நண்பகல் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படைத்தலும் இரவு 11 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    இதேபோல, ஆர்.எஸ் மங்கலம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களுக்கு அருபாலித்தார். செப்.11-ம்தேதி திருக்கல்யாணமும், செப்.12-ம் தேதி தேதி தேரோட்டமும், செப்.13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    செப்டம்பர் 4
    விளம்பி வருடம் – ஆவணி 19
    04-செப்-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30 :
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : நவமி ம 2.00
    நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 4.28
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சுகம்
    ரிஷபம் – பக்தி
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – பாசம்
    சிம்மம் – நன்மை
    கன்னி – விவேகம்
    துலாம் – ஆக்கம்
    விருச்சிகம் – செலவு
    தனுசு – ஆதரவு
    மகரம் – வெற்றி
    கும்பம் – உழைப்பு
    மீனம் – பொறாமை