Author: சக்தி ஆன்லைன் டீம்

  • iswaryangalai-alli-tharum-ko-poojai

    அனைத்துவித தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

    மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்ட வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

    எனவே, பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவை நீராட்டி முகத்திலும் பின்புறமும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பசுவை வலம் வந்து மும்முறை கோவந்தனம் செய்ய வேண்டும். பசுவிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை அளித்திடல் வேண்டும்.

    கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வணங்குவது சிறப்புடையது.

    “சர்வதாமதுகே- தேவி

    சர்வதீர்த்தா பிஷேபினி

    பாவனே ஸுரபிஸ்ரேஸ்டே

    தேவி-துய்யம்-நமோஸ்துதே”.

  • thirukaatkarai-appan

    கேரள மாநிலம் திருக்காட்கரை என்ற இடத்தில் அமைந்துள்ளது திருக்காட்கரை அப்பன் திருக்கோவில்.

    இத்திருத்தலத்தில் வாமன அம்சமாக எழுந்தருளி இருக்கும் திருமால் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். திருக்காட்கரை அப்பன் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படும் இந்த பெருமாள் தனது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி இருக்கிறார். தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்வல்லி என்றும் திருப்பெயரில் விளங்குகிறாள்.

    விருத்த விமானம் எனப்படும் விமானத்துடன் கூடிய இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும் மகாலட்சுமிக்கும் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம் மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

    முதன் முதலாக இந்த கோவிலில் தொடங்கப்பட்ட திருவிழா தான் ஓணம். காலப்போக்கில் கேரளா மாநிலம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. கபில முனிவர் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கபில தீர்த்தத்தில் உள்ள நீரைதான் மகாபலி கமண்டத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    திருகாட்கரை அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. ஒருநாள் நேர்ந்து கொண்டு வைக்கப்பட்ட பொன் வாழைக் குலைகளில் ஒன்றை
    காணவில்லை. இதனால் அந்த நாட்டை சேர்ந்த மன்னன், கோவிலுக்கு தினந்தோறும் வந்து திருக்காட்கரை அப்பனை வழிபடும் யோகி ஒருவரின் மீது சந்தேகம் கொண்டான். அவர் மீது திருட்டுப் பழி சுமத்தி, தண்டனையும் வழங்கினான். ஆனால் காணாமல் போன பொன் வாழைக் குலை திருக்காட்கரை அப்பனின் கோவில் வளாகத்திலே கண்டெடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் தன்னை சந்தேகப்பட்டதால், அனைவரையும் சபித்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் அந்த யோகி, அந்த கோவிலை சுற்றி பிரம்ம ராட்சசனாக திரிந்து கொண்டிருந்தார். அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீரவேண்டி யோகியை வழிபட்டு, அந்த கோவிலிலேயே யோகிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வந்ததன் காரணமாக, யோகியின் ஆன்மா சாந்தியடைந்தது. திருகாட்கரை அப்பனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், யோகியின் சன்னதிக்கும் சென்று வழிபட்டு செல்கின்றனர்.

    நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் இத்திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். மாதந்தோறும் திருவோண நாளில் நாராயணனை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

    அமைவிடம்: எர்ணா குளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் உள்ள அங்கமாலி ரயில் நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருக்கோவில்.

  • uchi-pillayarukku-kozhukattai

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

    முன்னதாக இன்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • periya-sesha-vagaanathi-veedhi-ula

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் வைத்தப்படி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்பித்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்த முதல்வர் சந்திரபாபுநாயுடு தேவஸ்தான சார்பில் அச்சிடப்பட்ட 2019 ஆண்டுக்காண கலெண்டர் மற்றும் டைரிகளை வெளியிட்டார்.

    பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 8 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சேஷத்தின் ( ஆதி சேஷன் ) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று ஏழு தலைகளுடன் கூடிய பெரிய சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.வீதிஉலாவில் போது நான்கு மாடவீதியில் இருப்புறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்க கற்பூர ஆரத்தி எடுத்தும் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி வீதிஉலாவிற்கு முன்னதாக இந்து தர்ம பிரச்சார பர்ஷித், அன்னமாச்சார்யா, தசா சகீத்திய திட்டத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடிய படியும் பஜனைகள் செய்தும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 14
    விளம்பி வருடம் – ஆவணி 29
    14-செப்-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30 :
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி மா 6.36
    நட்சத்திரம் : விசாகம் கா 6.01
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம்
    ரிஷபம் – நன்மை
    மிதுனம் – போட்டி
    கடனம் – தனம்
    சிம்மம் – வெற்றி
    கன்னி – அமைதி
    துலாம் – பயம்
    விருச்சிகம் – தாமதம்
    தனுசு – நலம்
    மகரம் – கோபம்
    கும்பம் – திறமை
    மீனம் – புகழ்

  • vinayakar-chadurthi-seyya-vendiyavai

    இன்று விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள்! இந்நாள் அன்று, பின்வருவதைக் கடைபிடிப்பது சிறப்பு…
    அதிகாலையில் குளித்து, வாசலில் மாவிலைத் தோரணத்தைக் கட்டி, வீட்டை மற்றும் பூஜை அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

    இந்த நாள் அன்று காலையில் இருந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு.

    பூஜை அறையில் ஒரு சிறிய கோலம் போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை வைத்து, இலையில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.

    அந்த இலையில் களிமண்ணாலான விநாயகரை வைத்து, அவரைப் பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.

    அதன் பிறகு, அவருக்குப் பழங்களைப் படைத்து, அதனுடன் அவர் விரும்பும் மோதகம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, நெய்வேத்தியம், பாயாசம் போன்ற பலகாரங்களைச் செய்து படைக்க வேண்டும்.

    விநாயகரின் பாடல்களைப் பாடி வணங்கி, உங்களது விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக, களிமண்ணால் செய்யப் பட்ட இந்த விநாயகரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.

  • pillayar-suzhi-pottu

    எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும்.

    அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.

    அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

    உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.

    மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி
    செப்டம்பர் 13
    விளம்பி வருடம் – ஆவணி 28
    சங்கடஹர சதுர்த்தி
    விநாயகர் சதுர்த்தி
    திருப்பதியில் இன்று முதல் பிரம்மோற்ஸவம்
    13-செப்-2018 வியாழன்
    கரிநாள்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30 :
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி மா 6.51
    நட்சத்திரம் : சுவாதி அ.கா 5.23
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – சிரமம்
    கடனம் – அதசி
    சிம்மம் – களிப்பு
    கன்னி – நஷ்டம்
    துலாம் – சோர்வு
    விருச்சிகம் – வரவு
    தனுசு – ஊக்கம்
    மகரம் – அலைச்சல்
    கும்பம் – கோபம்
    மீனம் – பாராட்டு

  • vinayakar-thudhi

    விநாயகர் துதி 1 

    ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி

    ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி

    ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி

    ஓம் விடலை விரும்பினாய் போற்றி

    ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி

    ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி

    ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி

    ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி

    ஓம் பாவமறுப்பாய் போற்றி

    ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி

    விநாயகர் துதி 2

    கணபதி என்றிட கலங்கும் வல்வினை

    கணபதி என்றிட காலனும் கை தொழும்

    கணபதி என்றிட கருமம் ஆதலால்

    கணபதி என்றிட கவலை தீருமே!

  • vinayakaruku-yanai-mugam-uruvana-story

    நமது புராணங்களின் கூற்றுப்படி, ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்க கூடாது என விநாயகருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    அப்போது, விநாயகர் தலை இல்லாமல் கிடந்ததை கண்டு பார்வதி தேவி கோபமும், ஆவேசமும் கொண்டார். அவரை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும்.